ஜேகேவின் சில குறிப்புகள்

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Wednesday, December 29, 2004

இந்தியன் எக்ஸ்ப்ரஸில் வெளியான ஒரு கட்டுரை....

Govt got wind 1 hr before waves hit Chennai

நான் முன்னர் புலம்பிக்கொண்டிருந்தது சரியாகிவிட்டது. மடையர்கள் தூங்கிக் கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். கபில் சிபல் முதல், கிருஷ்னசாமி வரை எல்லோரையும் வீட்டுக்குத் துரத்த வேண்டும். ஓரு விமானப் படைத்தளம் முழுகிவிட்டது என்று 8 மணிக்குத்தெரிந்ததும் IAF உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் என்ன கிழித்துக் கொண்டிருந்தது. பாகிஸ்தான் எதாவது ஒரு ஊரில் குண்டு போட்டு, டெலிபோன் ஒயர் எல்லாம் அறுந்து போனால் இப்படித்தான் இரண்டு நாடகளுக்கு சும்மா உட்கார்ந்திருப்பாரா கிருஷ்னசாமி. அந்தமானில் நின்றுகொண்டிருந்த நேவி கப்பல்களுக்குமா தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டது...அவர்களாவது சொல்லியிருக்கலாமே. தமிழ்நாடு மூழ்கிப்போய் 6 மணி நேரம் கழித்துத்தான் ராணுவம் அதன் உதவிக்கரம் நீட்டியிருக்கிறது. கேட்டால் மேலிடத்திலிருந்து உத்தரவு வரவில்லையாம்....இவர்கள் யரைப்பாதுகாக்க சென்னையிலும், திரிச்சியிலும் தளமமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


அரசாங்கமும், ராணுவமும், நேவியும், விமானப்படையும் மற்றும் வக்கத்த வானிலைத் துறையும்(IMD) மொத்தமாக சேர்ந்து மெத்தனமாக இருந்துவிட்டு, பத்து பதினைந்தாயிரம் பேரை பலி வாங்கிவிட்டார்கள்.

இந்த வெக்கக்கேட்டில், இந்தியா வெளிநாட்டு உதவி இப்போது வேண்டாம் என்கிறதாம்....எங்கே போய் நான் முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை...

படித்தவர்களின் கருத்துகள் - 0

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல