ஜேகேவின் சில குறிப்புகள்: காவிப்படை + மூடநம்பிக்கை = 200 கோடி இந்தியர்கள்?

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Monday, September 24, 2007

காவிப்படை + மூடநம்பிக்கை = 200 கோடி இந்தியர்கள்?

பாஜக இராமர் பெயரைச் சொல்லி மீண்டும் அரசியல் இலாபம் தேடத்துடிக்கிறது. "இந்துக்களின் உணர்வுகளை" பாதுகாப்பதை மொத்த குத்தகைக்கு எடுத்திருப்பதாக நினைத்துக்கொள்ளும் காவிப்படைகள் உண்மையிலேயே அவர்களின் நலன்களை முன்னிருத்துமானால் "இராமர் பாலம்" போன்ற மூடநம்பிக்கை பிரச்சாரங்களை துறந்துவிட்டு பகுத்தறிவை பற்றியிருப்பார்கள்.

உயர்சாதி இந்துக்களால் சொல்லப்படும் மந்திரம்கூட

"எமை பொய்யிலிருந்து மெய்யிற்கு இட்டுச்செல்,
எமை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு இட்டுச்செல்"

"Lead Us From Untruth To Truth
Lead Us From Darkness To Light"

என்றுதானே சொல்கிறது.

ஆனால் காவிப்படைகள் மக்களுக்கு அதையே உல்டாவாக கற்பித்து வருகின்றன போலும். அதனால் தான் வட மாநிலங்களில் இராமர் பெயரைச்சொன்னவுடன் எல்லோருக்கும் குருதி கொப்பளிக்கிறது. அவசரமான பிரச்சனைகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. காவிப்படைகளின் மற்றும் மத அடிப்படைவாதிகளின் மூடநம்பிக்கை பிரச்சாரங்களின்
பிடியிலிருந்து வெளி வர இயலாமல்தான் வடக்கில் தெற்கைவிட வறுமை மிகுந்தும், கல்வியறிவு குறைந்தும் இருக்கின்றன. மக்கள் தொகை வளர்ந்து கொண்டே போகிறது.
இந்த கட்டுரையின்படி(India heading for 2 billion
population.
A new assessment of India's population prospects has concluded that its numbers will almost certainly be near 1.8 billion by 2050 and could top 2 billion by the end of this century unless fertility rates decline more rapidly in India's largest and poorest states.
), இப்பொழுதைய நிலை தொடர்ந்தால், வட
மாநிலங்களின் பங்கு காரணமாக, 2100ல் இந்திய மக்கள்தொகை 200 கோடியாக இருக்கலாம். ஏற்கனவே இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமைகள்(இருக்க இடம், உண்ண உணவு, குடிக்க நல்ல தண்ணீர்) அற்ப சொற்பமானவை. இன்னும் 50-100 ஆண்டுகளில் அவை பாதியாக குறையப்போகின்றன.

விழித்துக் கொள்ளுங்கள் நண்பர்களே.

Labels: ,

படித்தவர்களின் கருத்துகள் - 0

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல