ஜேகேவின் சில குறிப்புகள்: இந்தியா விற்பனைக்கு இரு(ந்தது,க்கிறது, க்கும்)...

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Saturday, September 17, 2005

இந்தியா விற்பனைக்கு இரு(ந்தது,க்கிறது, க்கும்)...

இந்தியா விற்பனைக்கு இரு(ந்தது,க்கிறது, க்கும்)...

புதிதாய் வரவிருக்கும் ஒரு புத்தகத்தின் சில பகுதிகளை லண்டன் டைம்ஸ் இன்று வெளியிடிருக்கிறது. எழுபதுகளில் நமது அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிக்கைகாரர்கள் எப்படி இந்தியாவை கூறுபோட்டு உளவு சந்தையில் KGB மற்றும் CIA விடம் விற்றிருக்கிறார்கள் என்பதை அது விளக்குகிறது.

....
He(Oleg Kalugin) recalls one occasion when the KGB turned down an offer from an Indian minister to provide information in return for $50,000 on the grounds that it was already well supplied with material from the Indian foreign and defence ministries: “It seemed like the entire country was for sale; the KGB — and the CIA — had penetrated the Indian government....
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்

இதனால் அறிவிக்கப் படுவது யாதெனில்...கங்கிரஸ் காரர்களெல்லாம் KGB ஏஜெண்டுகளென்றும்...மற்ற எதிர் கட்சிகாரர்களெல்லாம் CIA ஏஜெண்டுகளென்றும்... அரசியல்வாதிகளெல்லாம் எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு பதில் சொல்லப் போறாங்கன்னு பார்க்க சிரிப்பாய் இருக்கப் போவுது. இதற்கிடையில்..மக்களின் ஏஜெண்டாய் நடித்துக்கொண்டிருக்கும் பத்திரிக்கைகளும் இந்த ஏமத்து வேலையில் பங்கெடுத்துக்கொண்டது ஆச்சிரியத்தையல்ல, பயத்தை தருகிறது.

பத்துக்கு மேற்பட்ட பத்திரிக்கைகளையும் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். ஏதோ சட்டம் தடுக்கிறதுன்னு அவற்றின் பெயரை டைம்ஸ் போடவில்லை. அது என்னமாதிரி சட்டமோ தெரியவில்லை(பங்காளிகள் என்பதாலிருக்குமோ). ஊழலை பற்றி ஊருக்கு உபதேசம் செய்யும் நான்காவது தூண்காரர்கள் இப்ப என்ன உபதேசிக்கப்போகிறார்களோ. எங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை/உண்டு என்றாவது "தேசிய" நாளிதழ்காரர்கள் எல்லாம் இப்படியோ அப்படியோ சொல்லியாகவேண்டும்.

இன்னும் கொடுமையான விசயம் என்னவென்றால், இந்திய கம்யூனிஸ்டுகளின் வண்டவாலம் வெட்ட வெளிச்சமாகியதுதான். இப்பதான் கேஜிபி காசு தராதே...என்ன செய்கிறார்களென்று தெரியவில்லை..சீனா கம்யூக்களிடமிருந்து வாங்கிக்கொள்வார்களோ? என்னவோ.

இதெல்லாம் நடந்து ரொம்ப நாளச்சி இப்பொ அந்த கருமத்த பத்தி பேசுறதில என்ன பயன்னு நெறய பேர் நினைக்கலாம்.அதிகாரத்தில் இருப்பவர்கள் விலைபோவதற்கு ரொம்ப நேரம் ஆகது என்பதைத்தான் இது காமிக்கிறது. இது எல்லா காலத்துக்கும் பொருந்தும். தற்போதைய அரசியல்வாதிகளும் காவியிச, கம்யூனிச அல்லது சந்தையிச ஏஜண்டுகளிடம் விலை போயிருக்கமாட்டார்கள் எனபது என்ன நிச்சயம்.

தனி மனிதர்களாகிய நாம் இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால் அதிகாரம் இருக்கும் எல்லோரும் பெரும்பாலும் ஏமாத்துப் பேர்வழிகளா இருக்க நெறய வாய்ப்பிருக்கு... நாம் இவர்களிடம் எச்சரிக்கையா இருக்கவேண்டும். எல்லா அரசியல்வதிகளும், அதிகாரிகளும் இப்படி யாரிடமோ விலை போனவர்கள்தான் என்ற கருத்துடன் தான் நாம் அவர்களை அனுகவேண்டும் போலிருக்கிறது. அப்படி இல்லையென்று நிறுவ வேண்டியது அவர்களுடைய பொருப்பாகவே இருக்கவேண்டும்.
ஜேகே

படித்தவர்களின் கருத்துகள் - 2

At Mon Sep 19, 12:18:00 PM GMT-6, Blogger குசும்பன் சொன்னது

//தற்போதைய அரசியல்வாதிகளும் காவியிச, கம்யூனிச அல்லது சந்தையிச ஏஜண்டுகளிடம் விலை போயிருக்கமாட்டார்கள் எனபது என்ன நிச்சயம்.//

நியாயமான கேள்விதான்! ஆனா பதிலு தெரிஞ்சதுதானே :-(

 
At Mon Sep 19, 07:25:00 PM GMT-6, Blogger Jayakumar சொன்னது

பதிவைப் படித்து கருத்து கூறிய குசும்பருக்கு நண்றி. பதில் தெரிஞ்சதானாலும், இப்படி அடிக்கடி கேள்வி கேட்டுட்டே இருந்தா இந்த ஏமாத்துக்காரர்களிடம் கொஞ்சம் கம்மியா ஏமாறலாம்(நப்பாசைதான் :-))
அப்பறம் காங்கிரஸ் கம்யூனிஸ்டுகளோட மறுப்பு அறிக்கைகள் பார்த்திருப்பீர்கள். "அடிப்படையற்றவை", "முகாந்திரமற்றவை", "பதில் சொல்ல தகுதியற்றவை", "CIA மற்றும் MI6 உளவு நிறுவணங்களின் சதி"...இந்த ரேஞ்சில் தான்.

பாஜக, அதிமுக போன்ற எதிர்கட்சிகளும் பத்திரிக்கைகளும் அதிக கூச்சல் போடாதது...ம்ம் என்னமோ நடக்குது...

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல