ஜேகேவின் சில குறிப்புகள்: மீண்டும் ஒரு முறை...

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Sunday, October 30, 2005

மீண்டும் ஒரு முறை...

இன்னொரு முறை பயங்கரவாதம் இந்தியாவை உலுக்கியிருக்கிறது. இதைச் செய்தது யாராய் இருந்தாலும் அவர்கள் தேச விரோதிகள் மட்டும் அல்ல மனிதத்தின் விரோதிகளும் கூடத்தான். ஒரு தனி மனிதனின் அல்லத சமுதாயத்தின் எம்மாதிரியான இழப்போ, அநீதியோ இதுபோன்ற சக மனிதரின் மீதான வன்முறையை நியாயப் படுத்தாது. எந்தப் பிரச்சனையையும் இது தீர்த்து வைக்கப் போவதில்லை.

குடிமக்களின் பாதுகாப்பை பேனிக்காப்பது அரசின் தலையாய கடமை. ஒவ்வொரு வருடமும் பல்லாயிரம் கோடிகளில் வரிப் பணத்தை செலவழித்தும் ஒரு பாதுகாப்பான சமுதாயச் சூழலை மக்களுக்குத் தர முடியாமல் இருப்பது மத்திய மாநில அரசுகளின் மிகப்பெரிய தோல்வி. மும்பை குண்டு வெடிப்பு, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தல் போன்ற பல கொடூரமான பயங்கரவாத செயல்களுக்கு காரணமான குற்றவாளிகள் இன்னும் சட்டத்தின் முன் கொண்டுவரப்படாதது நம் அரசாங்கத்தின் கையாலாகாமையையே காண்பிக்கிறது. "பயங்கரவாதக் கோழைகளை முறியடிப்போம்" என வாய்கிழியக் கத்துவதால் மட்டும் மக்கள் மனதில் அமைதியைக் கொண்டுவர முடியாது. அரசு இயந்திரம் இனியும் மெத்தனமாயில்லாமல் ஒழுங்கான உண்மையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

சிலர் பயங்கரவாதச் செயல்களைக் கண்டிக்கும் அதே நேரத்தில் அரசு வன்முறைகளைச் சுட்டிக்காட்டி அதுதான் இது போன்ற பயங்கரங்களுக்கு வழிகோள்கின்றன எனக் கூறுகிறார்கள். அது ஒரளவிற்கு உண்மையே. ஆனால் அரசு வன்முறையை எதிர்க்கவும், அதிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் பல நிறுவன/சட்ட ரீதியான வாய்ப்புகள் உள்ளன. பொதுமக்களை குறி வைக்கும் பயங்கரவாத இயக்கங்களிடமிருந்து தனி மனிதர்கள் எவ்வாறு தங்களைப் பதுகாத்துக் கொள்ள இயலும்.

தீவிரவாதம் தலை தூக்குவதற்கு அதிகார வர்க்கத்தின், அதிகார துஷ்பிரயோகமும், வன்முறைகளும், தனி மனித சுதந்திரத்தை தேவைக்கேற்ப காற்றில் பறக்க விட்டு விடுவதும், அடுத்தவர்களை அடக்கி ஆள நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைவதும் கூட சில காரணிகள். இவை பாதிக்கப் பட்டவர்களை மனிதத்தின் எல்லைக்கே இட்டுச்செல்வது ஒன்றும் நம்பத்தகாத விசயம் இல்லை. பயங்கரவாத செயல்களை கோழைகளின் செயல் என கண்டிக்கும் நாமும், நமது ஜனநாயக அரசும் மற்றவரின் சமுதாய, கலாச்சார மற்றும் பொருளாதார சுதந்திரத்தை ஒவ்வொரு கணமும் மதித்து நடக்கும் பொழுதுதான் ஒரு பயங்கரவாதமற்ற சமுதாயத்தை அடைவதற்கான பயனத்தில் பாதி தூரத்தை நாம் அடைவோம்.

படித்தவர்களின் கருத்துகள் - 2

At Mon Oct 31, 08:59:00 AM GMT-6, Anonymous Anonymous சொன்னது

Thaangal kooriyullathup pontru APPAAVI POTHU MAKKALAI KOllak koodiyavarkal Nitchayam Manithak kulatthukkae Ethiriyaavaarkal....Avarkal Kandippaaka Kadumaiyaana MuraiyilThandikkap pada vaendum......Ennappiratchanaiyaaka irunthaalum pothu makkalai thaakuvathai atrukkkolla mudiyaathu Arasaangatthukku ethiraana Nadavadikkaikku Appavi pothumakkalai thandippathu niyaam illai..........

 
At Thu Nov 03, 11:40:00 PM GMT-6, Blogger Jayakumar சொன்னது

Thanks for your feedbacks Hameed!

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல