ஜேகேவின் சில குறிப்புகள்: நான்

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Sunday, June 08, 2008

நான்

சென்னையில்
ஒரு மென்பொருள்
நிறுவனத்தில்
பணியாற்றிக் கொண்டிருக்கும்
நான், என் எழுத்தைப்போலவே,
சாதாரணமானது.
பிழைகள் நிறைந்தது.
திரை படர்ந்தது.
நோக்கமற்றது.
பொருளற்றது.
தான் தோன்றி.
நிலையற்றது.
மாறுவது.
நளினமற்றது.
வறண்டது.
பரந்தது.
ஆழமற்றது.
கோபமுற்றது.
பொறுமையற்றது.
பல ஏமாற்றங்களை சகித்துக்கொண்டது.
சில வெற்றிகளை சுகித்துக்கொண்டது.
கேள்விகள் நிறைந்தது.
அவ்வப்போது பதில் தேடுவது.
மற்ற நேரங்களில் சும்மாயிருப்பது.
எப்பொழுதும் இருப்பது.
எப்பொழுதாவது இயங்குவது.

Labels: ,

படித்தவர்களின் கருத்துகள் - 17

At Sun Jun 08, 03:56:00 PM GMT-6, Anonymous Anonymous சொன்னது

Nice poem.

Good self-analysis. Great courage to say that in open.

I get reminded of Socrates. He said something like this - I am the intelligent of all because only I know that I know nothing.

Honest self-analysis is a necessary ingredient of success and happiness.

 
At Sun Jun 08, 10:52:00 PM GMT-6, Blogger Jayakumar சொன்னது

சதீஷ்...
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி...

ஆனால், இதை கவிதை என்று சொல்லி "கவிதை" என்ற சொல்லை அவமதித்ததற்கு எனது கண்டனம்.

 
At Sun Jun 08, 11:09:00 PM GMT-6, Blogger ஜெகதீசன் சொன்னது

:)
//
சதீஷ்...
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி...

ஆனால், இதை கவிதை என்று சொல்லி "கவிதை" என்ற சொல்லை அவமதித்ததற்கு எனது கண்டனம்.
//
அதெல்லாம் தெரியாது... இப்படியெல்லாம் மடக்கி எழுதுனா அது கவிஜை தான்!!!
:P

 
At Sun Jun 08, 11:26:00 PM GMT-6, Blogger ஆயில்யன் சொன்னது

//எப்பொழுதும் இருப்பது.
எப்பொழுதாவது இயங்குவது.//


இயங்குவதை விட இருப்பதில் இருப்பது நிறைய :)))))


நட்சத்திர வாழ்த்துக்களுடன்

 
At Sun Jun 08, 11:31:00 PM GMT-6, Blogger முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது

நட்சத்திர வாழ்த்துக்கள்.. ஜேகே..

அது ஏன் உங்களை நீங்கள் இப்படி அது இதுன்னுசொல்லிட்டீங்க.. :(

 
At Mon Jun 09, 12:28:00 AM GMT-6, Blogger Tech Shankar சொன்னது

நட்சத்திர வாழ்த்துக்கள்.. ஜேகே..
Star Vazhga.

 
At Mon Jun 09, 07:35:00 AM GMT-6, Blogger Jayakumar சொன்னது

ஜெகதீசன்,
உங்களின்
பின்னூட்டத்திற்கு
மிக்க
நன்றி.
அப்ப
இதுவும்
கவுஜை
கேட்டகிரில
வருமா?
--
ஜேகே

 
At Mon Jun 09, 07:36:00 AM GMT-6, Blogger Jayakumar சொன்னது

ஆயில்யன்,
தமிழ் நெஞ்சம்,

உங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

 
At Mon Jun 09, 07:38:00 AM GMT-6, Blogger Jayakumar சொன்னது

கயல்விழி முத்துலெட்சுமி,

"அது" எப்பவுமே அப்படித்தான்.

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

- ஜேகே

 
At Mon Jun 09, 08:47:00 AM GMT-6, Blogger கிரி சொன்னது

//அதெல்லாம் தெரியாது... இப்படியெல்லாம் மடக்கி எழுதுனா அது கவிஜை தான்!!!//

ஹா ஹா ஹா ஹா

//அப்ப
இதுவும்
கவுஜை
கேட்ட"கிரில"
வருமா?
--
ஜேகே//

அது தெரியாது..ஆனா நான் (கிரி) வந்துட்டேன் .

 
At Mon Jun 09, 09:06:00 AM GMT-6, Blogger Jayakumar சொன்னது

கேட்ட
உடனேயே
வந்த
கிரி
அவர்களே,
வாங்க"கிரி"

 
At Mon Jun 09, 10:48:00 AM GMT-6, Blogger Unknown சொன்னது

நட்சத்திர வாழ்த்துக்கள், ஜேகே!

அதெல்லாம் ஒப்புக்க முடியாது. மடக்கி மடக்கி எழுதுனா, அது கவிதைதான். ஆனா, ரெண்டு ரெண்டு தடவ வரலயே...அப்போ, கவிதை இல்லையா? ஓ... சொல்லும்/படிக்குபோதுதான் ரெண்டு தடவ நீட்டி முழக்கனுமோ?

நீங்கல்லாம் எதுக்குடா பின்னூட்டம் போட வறீங்கன்னு நறநறக்குறது, சாரி... கேக்கல :)

 
At Mon Jun 09, 11:01:00 AM GMT-6, Blogger Athisha சொன்னது

ஜேகே

வாழ்த்துகள் , கலக்குங்க.

அன்புடன் அதிஷா

 
At Mon Jun 09, 12:58:00 PM GMT-6, Blogger Jayakumar சொன்னது

நம்மவூரான்,

என்னுடைய மடக்கியை(அதாங்க அந்த கவுஜை) படித்து நீங்கள் பல்லைகடித்து கொலை வெறியுடன் நாக்கைத் துருத்தாத வரைக்கும் சரி.

அதிஷா,

உங்களின் ஊக்கத்திற்கு நன்றி

 
At Mon Jun 09, 01:01:00 PM GMT-6, Blogger பிரேம்ஜி சொன்னது

வாழ்த்துக்கள். அசத்துங்கள்.

 
At Sat Jul 26, 07:28:00 AM GMT-6, Anonymous Anonymous சொன்னது

சில கேள்விகள் ஜேகே,
மடக்கி என்றால் கவிதையா?

அது என்ன நட்ச்சத்திர வாழ்த்துக்கள் ??

தொடர்ந்து எழுதுங்கள் ஜேகே!!

மனமார்ந்த வாழ்த்துகள்!!!

 
At Sat Jul 26, 11:50:00 AM GMT-6, Blogger Jayakumar சொன்னது

அன்புள்ள ஜுபின்,

//மடக்கி என்றால் கவிதையா?//

:)

அது என்ன நட்ச்சத்திர வாழ்த்துக்கள் ??

தமிழ்மணம் பதிவுகள் திரட்டியில் "சில குறிப்புகள்" நட்சத்திரப் பதிவாக ஒரு வாரம் முன்னிறுதப்பட்டிருந்தது. அதற்காக வலைப்பதியும் நண்பர்கள் தெரிவித்த வாழ்த்துக்களே அவை

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல