ஜேகேவின் சில குறிப்புகள்

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Wednesday, July 30, 2008

காதலற்ற கவிதை

நீ வன்முறை
தெரிந்திருக்க நியாயமில்லை
எனக்கும்தான்
முதலில்

மழையின் நகக் கீறல்களுக்கு
இறகற்ற சிறகுகள்
ஆறுதல் அளித்த மற்றொரு
சாதாரண நாளில்
உன்னிடம் நான் தூதுவிட்ட
மௌனச் சிதறள்களின்
முகத்தில் அறைந்தது
உன் வன்முறை

விளிம்பில் நின்ற
பிரளயம் நிரம்பிய
மனதின் தாங்கவொன்னா
உறுத்தல்
உன்னிடம் அனுப்பிய
சொற் சிதறள்களை
வெற்றிடத்தில் தெளித்த
கனமெனக்கு உணர்த்திவிட்டது
உன் பயங்கரம்

என் மீது காட்டிய
எந்த வித வருத்தமுமற்ற
வெறுப்பை
திருபித்தர
யத்தனிக்கும் ஒவ்வொரு கனமும்,
கோபம் நிறைந்த
எண்ணங்களில் எரித்திட
முனையும் ஒவ்வொரு பொழுதும்
கலவரமூட்டுமுன்
பெயர் மட்டுமென்னை
இனித்தே வதைப்பதேன்.

Labels:

Thursday, July 17, 2008

வன்முறை மிக்க மௌனம்

நெரிசல் மிகுந்த நம் தனிமையை
நிறைத்திருக்கிறது
வன்முறை மிக்க மௌனம்

அடர் கிளை மரங்களுதிர்க்கும்
சருகுகளாய் மிதக்கும்
சில சொற்பிணங்கள்

தட்டிடத் தட்டிடக் கொட்டிய
உண்டியல் பிளவினை உற்றுப் பார்க்கிறேன்
இன்னும் இருக்கிறதா நாணயமென்று

சென்ற மழைக் குட்டையில் முட்டையிட்டு
குஞ்சு பொறித்த கொசுக்களின்
குருதிகள் நொதித்து நாற்றமடிக்கின்றன

உன் வன்முறை வலிப்பதைவிட
அயர்ச்சியாய் இருக்கிறது
வலிகளையும், அயர்ச்சியையும் கழுவிடக்
காத்திருக்கிறேன் அடுத்த மழைக்காக

Labels:

Sunday, June 08, 2008

நான்

சென்னையில்
ஒரு மென்பொருள்
நிறுவனத்தில்
பணியாற்றிக் கொண்டிருக்கும்
நான், என் எழுத்தைப்போலவே,
சாதாரணமானது.
பிழைகள் நிறைந்தது.
திரை படர்ந்தது.
நோக்கமற்றது.
பொருளற்றது.
தான் தோன்றி.
நிலையற்றது.
மாறுவது.
நளினமற்றது.
வறண்டது.
பரந்தது.
ஆழமற்றது.
கோபமுற்றது.
பொறுமையற்றது.
பல ஏமாற்றங்களை சகித்துக்கொண்டது.
சில வெற்றிகளை சுகித்துக்கொண்டது.
கேள்விகள் நிறைந்தது.
அவ்வப்போது பதில் தேடுவது.
மற்ற நேரங்களில் சும்மாயிருப்பது.
எப்பொழுதும் இருப்பது.
எப்பொழுதாவது இயங்குவது.

Labels: ,

Friday, April 04, 2008

அறிவு ஜீவி மரங்களுக்கு

என்னைத் தாண்டியது
அறிவு ஜீவி மரம்
என்னிடம் இல்லை
சதுரத்தின் வளைவுகளின் தீர்க்கம்
வட்டத்தின் போக்கின் நிதானம்
எமது இருத்தலை
கூட்டலும் பெருக்கலுமா நிர்ணயிக்கும்

என் கோபங்களுக்கு நிகழ்தகவு புரிவதில்லை
அவை எப்போதும் நிகழ்பவை

உன் சொற் புனிதங்களை அழிக்கத்தான்
படை திரட்டிக் கொண்டிருக்கிறேன்

என் எதிரிகள்
அணியணியாய் வகுத்து நிற்கின்றனர்
என் அணியில்
ஒரு நிரையும் ஒரு நிரலும்

நீ மனித உரிமைகள் பேசுவது விசித்திரம்
அவ்வளவு சித்திரவதைகளை
நீ மட்டுமே செய்திருக்க முடியும்

கைதட்டல்களுக்காக நான் வாசிப்பதில்லை,
எனினும்,
கொஞ்சம் சலனங்களை
வெறுக்க முடியவில்லை

எவரது வருகைக்காகவும்
நான் பரிமாறவில்லை
எவராவது வந்தாரா
என வாயிலைப் பார்க்காமலும் இல்லை

என் தியானங்கள் என் குழப்பங்களை நோக்கியே
என் குழப்பங்கள் அத்தியானங்களிலிருந்தே

எல்லோருக்கும்
எதுவாகவாவுது தெரிகிறேன்
உனக்குமட்டும்தான்
நான் மனித வடிவிலான
வெற்றிடமாகப் படுகிறேன்

கவிதைகளை யார் கட்டிப் போட்டது?
அவை சொல் வட்டங்கட் குள்ளேயே சுற்றி வருகின்றன.

விரயமாக்கப்பட்ட இன்னொரு இரவின் முடிவில்
மற்றொன்றை எதிர்நோக்கி
சோம்பலுடன் விடியும் எதேச்சையான ஒரு காலையில்தான்
என் அடிமனது கலங்கி வெளியில் வருகிறது
யாரும் செய்து வைக்காத
இந்த சூன்யம் மிகுந்த குப்பை.

Labels:

Tuesday, April 01, 2008

உன் கவிதைகளை நான் முற்றிலும் வெறுக்கிறேன்

உன் கவிதைகளுக்கு என்னிடம் பொறுமையில்லை
சரம் வெடிப்பது போலிருக்கிறது
எனது அன்றாடம்
சோகம் சொட்டும் வரிகளுக்கிடையில்
சில மணித்துளிகளல்ல
பல யுகங்கள் கடந்து விடுகின்றன

உன் கவிதைகளுக்கு என்னிடம் நேரம் இல்லை
மேசையை நிறைத்திருக்கும் இன்று
எனது மாலையையும்
இரவையும்
விழுங்கப் பசித்திருக்கிறது

உன் கவிதைகள் எனக்குப் பிடிக்கவில்லை
அவை நெருஞ்சி முள்ளைப் போல்
குத்துவதும் அல்லாமல்
நிரந்தரமாய் நின்று உறுத்துகின்றன

அழகியல் உனக்கு சுத்தமாய் தெரியவில்லை
உன் கவிதைகள் அசிங்கமாய்
சீழ் நிறைந்த சிறு புண்களாய் வீச்சமடிக்கின்றன

உன் கவிதைகளை நான் முற்றிலும் வெறுக்கிறேன்
ஏன் தெரியுமா
அவற்றை
நீ எழுதினாய்
நான் வாழ்கிறேன்

Labels:

Friday, March 28, 2008

முதலில் அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள்

முதலில் அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள்
நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் யூதரில்லை.

பின், அவர்கள் கம்யூனிஸ்டுகளைத் தேடி வந்தார்கள்
நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் கம்யூனிஸ்டில்லை

பின், அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள்
நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியில்லை

பின் என்னைத் தேடி வந்தார்கள், எதிர்த்துக் கேட்க யாரும் மிச்சமில்லை.

:(

- ஒரு ஜெர்மன் பாதிரியார் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் எழுதிய கவிதையின் உத்தேச தமிழ் வடிவம்.

Labels: , ,

Thursday, December 20, 2007

பிலைகழும் யெநக்குப் பிடிக்கும்

னேர்ரு யென்ண ணிநைத்துக்கொந்டிறுண்தாய்
கநவிள் யேண் வறவிழ்ளை?

வுன்நைத்தாண். மரண்துபோநேண். எந்ந எலுதுகிராய்?

வுன்நைத்தாண்.

யிவ்வலஉ பிலைகழ்!

உண்ணிள் பிளை யிழ்ழையோ?

இள்ளை, இறுந்தாழும் யிது அதிகம்.

யெனக்காகத்தான் எலுதுகிரேந்
ணீ படித்து பாறாட்டவள்ழ
யெண் தவரெள்ளாம் அரியாமள்
மட்டும் செய்யப்பட்டவையழ்ள
பிலைகழும் யெணக்குப் பிடிக்கும்

Labels: