ஜேகேவின் சில குறிப்புகள்: வன்முறை மிக்க மௌனம்

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Thursday, July 17, 2008

வன்முறை மிக்க மௌனம்

நெரிசல் மிகுந்த நம் தனிமையை
நிறைத்திருக்கிறது
வன்முறை மிக்க மௌனம்

அடர் கிளை மரங்களுதிர்க்கும்
சருகுகளாய் மிதக்கும்
சில சொற்பிணங்கள்

தட்டிடத் தட்டிடக் கொட்டிய
உண்டியல் பிளவினை உற்றுப் பார்க்கிறேன்
இன்னும் இருக்கிறதா நாணயமென்று

சென்ற மழைக் குட்டையில் முட்டையிட்டு
குஞ்சு பொறித்த கொசுக்களின்
குருதிகள் நொதித்து நாற்றமடிக்கின்றன

உன் வன்முறை வலிப்பதைவிட
அயர்ச்சியாய் இருக்கிறது
வலிகளையும், அயர்ச்சியையும் கழுவிடக்
காத்திருக்கிறேன் அடுத்த மழைக்காக

Labels:

படித்தவர்களின் கருத்துகள் - 3

At Sat Jul 19, 03:59:00 PM GMT-6, Blogger செழியன் சொன்னது

மௌனம்,அறிவிக்கப்படாத வன்முறைதான்.

அதேவேளை, வன்முறை அயற்சி தருகிறது என்பது எனக்கு புரியவில்லை.

தொடர்ந்து எழுதுங்கள்.

 
At Sun Jul 20, 01:29:00 AM GMT-6, Blogger Jayakumar சொன்னது

செழியன்...//தொடர்ந்து எழுது//

தொடர்ந்து எழுதுவோம்..

வீட்டில் BSNL internet வேலை செய்யவில்லை. அதான் ஜிடால்கில் வரவில்லை...இன்னிக்காவது வேலை செய்யுதான்னு பார்ப்போம்

 
At Tue Jul 22, 06:50:00 AM GMT-6, Blogger அறிவகம் சொன்னது

அறிவகம் உங்கள் வருகையை எதிர்பார்க்கிறது ஜெ.கே...

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல