ஜேகேவின் சில குறிப்புகள்: இடையில் இரு புதிர்கள்: அரட்டை

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Wednesday, July 16, 2008

இடையில் இரு புதிர்கள்: அரட்டை

puǝıɹɟ ʎɯ: உன் பதிவு பார்த்தேன்..
ǝɯ: எப்படி இருந்தது?
puǝıɹɟ ʎɯ: எனக்கு அவ்வளவாக புரியலை
ǝɯ: ஹ்ம்ம்ம்...எனக்கும் அப்படித்தான் தோன்றியது. யாருக்கும் புரியாதென்று. எதுவுமே புரியலையா...இல்லை கொஞ்ச கொஞ்சம் புரியலையா?
puǝıɹɟ ʎɯ: விளக்கி சொல்லுடா.. நான் ரொம்ப படிக்கறதில்லை.. இபபோ.. எல்லாம்.. சோ எனக்கு புரியலை. இது எதாவது எழுத்து உத்தி-யா
ǝɯ: அப்படியெல்லாம் ஒரு மண்ணும் இல்ல. சும்மா எழுதினேன்...நான் நினைத்தது எழுத்தில் வரவில்லை போல...படிப்பதற்காவது எளிதாக இருந்ததா இல்லை அதுவும் அயற்சியாக இருந்ததா?
puǝıɹɟ ʎɯ: உன்னோட... கனவு பத்தியா? இல்ல.. நலலா இருந்தது..மயக்க நிலை... பயம்... கனவு ---
ǝɯ: கனவு பற்றினு இல்ல....கனவு நனவு பற்றிய குழப்பம் பற்றியது...
puǝıɹɟ ʎɯ: ம்ம்...இந்த எண்ணம் ... எப்போ தோணியது.. அதிகாலைலயா
ǝɯ: எனக்கு பொதுவாவே.. இப்பொழுது நடப்பது கனவா இல்லை நனவா...அது கனவில்லைனு எப்படி உறுதியா சொல்ல முடியும் போன்ற கேள்விகள் அடிக்கடி வரும்
அதன் விளைவுதான்
Sent at 00:05 on Thursday
ǝɯ: ...இது ஒரு பயங்கர கனவை விவரிப்பது போல இருக்கும் என்று எனக்கும் தோன்றியது...அது மாதிரி இல்லாமல்தான் எழுத முயன்றேன்...ஆனா சரியாக வரவில்லை
puǝıɹɟ ʎɯ: ம்ம்ம்..கனவு மாதிரி இருந்தது...
Sent at 00:08 on Thursday
puǝıɹɟ ʎɯ: இன்னும்... நல்லா...மொழி-ஐ கையாண்டால்.. நீ சொல்லற மயக்க நிலை-யை கொண்டு வர முடியும்-னு தான் தோணுது..ஜெயமோகன் எழுதறார் இல்ல?
ǝɯ: கதையை விபரிப்பனைப் பொருத்தவரையில் எல்லாம் உண்மையிலேயே நடந்திருக்கிறது. ஆனால் அதுவே முன்னுக்குப் பின் முரணாக இருப்பதுவும் அவனுக்குத் தெரிகிறது. அப்படிங்கிற பட்சத்தில ஒரு மூண்றாவது நபர் இந்த விபரிப்பை எப்படி புரிந்து கொள்வார்...
Sent at 00:10 on Thursday
puǝıɹɟ ʎɯ: எனக்கு தெரியலை.. எனக்கு தெரிந்து அதிகாலை.. நேரம் .. இப்படி .. கனவும், நனவும்.... சேர்ந்து வரும்.... மதியம்... தூங்கும்போதும்... வெளித்தூண்டல்களும் கலவையாகி வரும.கனவோடு. மச்சி... நான் உன லெவல்-ல இல்ல-ன்னு தோனுது..நீ... வேற மக்கள்-கூட பேசு..
ǝɯ: ஹா ஹா ஹா....நல்ல ஜோக். நான் இப்ப இலக்கியவாதியா ஆயிட்டேன்....ஏன்னா நான் எழுதுறது அடுத்தவங்களுக்கு புரியல....:)))
Sent at 00:18 on Thursday
puǝıɹɟ ʎɯ: நிறைய ... பிரதி, வாசகன்... அப்படி எல்லாம் படித்து...எனக்கு ஒரே குழப்பமா இருக்கு..எனக்கு ஒன்னும் புரியரதில்லை..
ǝɯ: ஆமாம்....எல்லாரும் ஒரே நேரத்தில் பின் நவீனவியாதிகளாகிட்டாங்க
puǝıɹɟ ʎɯ: தெரியலை... இதுக்கு நான் தயார் செய்துக்கனும்-னு தோனுது.
ǝɯ: வேண்டவே வேண்டாம்...
Sent at 00:20 on Thursday
puǝıɹɟ ʎɯ: உனக்கு.. வரும்.. பின்னூட்டத்துக்கு காத்திட்டு இருக்கேன்...
ǝɯ: யார் போடப்போறா...??
puǝıɹɟ ʎɯ: மக்கள் என்ன சொல்லறாங்கன்னு..வரும் பாரு..
ǝɯ: யாராவது படிச்சாதானே...
Sent at 00:24 on Thursday
puǝıɹɟ ʎɯ: வெய்ட் செய்வோம்..
Sent at 00:25 on Thursday
puǝıɹɟ ʎɯ: நீ... ************-கிட்ட விமர்சனம் கேளு..
ǝɯ: போடா...நீ ஒரு ஆளு....அவய்ங்களுக்கெல்லாம்...ஏற்கனவே நாலு கொம்பு...
puǝıɹɟ ʎɯ: அப்படியா..
Sent at 00:27 on Thursday
puǝıɹɟ ʎɯ: அப்போ...உனக்கு பதிவுலக நண்பர்கள் -- இருக்காங்க இல்ல..அவங்க கிட்ட கேளு..எனக்கு தெரியலை..
ǝɯ: நான் யாருடனும் வைத்துக் கொள்வதில்லை...
puǝıɹɟ ʎɯ: ம்ம்.. வைத்துக்கொண்டால்தானே.... வந்து பின்னூட்டம் போடுவாங்க
ǝɯ: ரொம்ப நாளாச்சே பதிவெழுதி...ன்னுட்டு இதப் போட்டேன்
puǝıɹɟ ʎɯ: நீஒரு குழு-ல இருக்கனும் இல்ல..
ǝɯ: பின்னூட்டம் யாரும் போடனும்னு எல்லாம் எதிர்பார்ப்பதில்லைடா. நான் எழுதுவது என் முதுகை நான் சொறிந்துகொள்ள மட்டுமே...
puǝıɹɟ ʎɯ: :-) அது சரி.
ǝɯ: யாருமே படிக்காட்டுனாகோட எனக்கொன்னும் பிரச்சனயில்ல. நாம பார்க்கிற வேலையயே ஒழுங்கா பாக்கிறதுல்ல...இதுல நாம கதையெழுது வேற வந்துட்டோம்ம்...அதுல எதிர்பார்ப்பு வேற இருந்தா....எனக்கே ஜாஸ்தியா படும்...
puǝıɹɟ ʎɯ: இல்லடா.. நீ... ஒரு ஒத்த கருத்து உடைய மக்கள்-- வைத்து ஒரு குழு உருவாக்கு..
ǝɯ: ஹா ஹா....
puǝıɹɟ ʎɯ: நிஜமா சொல்லறேன்..
ǝɯ: என்னோட ஒத்த கருத்துள்ளவர்கள் என்னை உட்பட யாருமே இருக்க மாட்டார்கள்.....
puǝıɹɟ ʎɯ: எல்லாமும் இல்ல..
ǝɯ: I have MPD...don't you know
puǝıɹɟ ʎɯ: ஒன்னு இருந்தால் போதும்..:-)..அன்னியன் மாதிரி-யா?
ǝɯ: :)..it's not a big deal da...we'll write...always...not for the sake of achieving anything...just for the sake of writing....its as meaningless as we are...and our lives are....
Sent at 00:37 on Thursday
puǝıɹɟ ʎɯ: எனக்கு என்னதோனுதுன்னா.... உன்னோட வாழ்க்கை... குறிக்கோள் இல்லாமல் ..... ஒரு routene-aa போய்ட்டு இருக்கு... and you dont know what to do for that.
ǝɯ: அப்படி வா...இப்ப நீ ஒரு பின்னவீனத்துவ வாசகன் மாதிரி பேசுற....
puǝıɹɟ ʎɯ: அப்போ... நிஜமாகவே.. எனக்கு பின்னவீனத்தும் புரிந்து விட்டதா?? சூப்பர்..
ǝɯ: ஹா ஹா ஹா....
Sent at 00:52 on Thursday
puǝıɹɟ ʎɯ: அப்புறம்... நீ வைத்த... வானவில்-- பேரு... நல்லா இருக்கு..
ǝɯ: :)
puǝıɹɟ ʎɯ: ஓகே..
ǝɯ: முதல்ல அது பெண் கேரக்டர் மாதிரி தோனிச்சா? இல்லையா?
puǝıɹɟ ʎɯ: ஆமாம். பையனுக்கு ... பொருந்தலை--ன்னு தோனுது.
ǝɯ: வானவில்லன் னு வச்சர்லாமா....:)
puǝıɹɟ ʎɯ: கேரக்டர்-ஐ பொண்ணா மாத்திடலாம்..
ǝɯ: கிளிஷே வாகிடுமே...பசங்க பொம்பளைப்புள்ளைங்கள சைட் அடிக்கிறது சகஜம் இல்லயா?
puǝıɹɟ ʎɯ: அட பாவி...
ǝɯ: அப்புறம் ஏன் வானவில் பெண் பெயர்னு நினைக்கிற...அது வளைந்து கொடுப்பதாலா...இதிலிருந்து உன் ஆணாதிக்கக் கூறுகள் வெளிப்படலயா?
puǝıɹɟ ʎɯ: அய்யா...சாமி... ஆளை விடு... . நீ என்கேயோ போய்ட்டெ
ǝɯ: :D
puǝıɹɟ ʎɯ: பெரிய ஆட்கள் கிட்ட பேசறப்பொ... பார்த்து பேசனும். ம்ம்..
ǝɯ: அப்பா....கொஞ்சம் படத்த போட்டாச்சி....
puǝıɹɟ ʎɯ: வானவில்--- பையனை யோசிக்க முடியுதா. உன்னால. என்னால் முடியல
ǝɯ: வை நாட்....
Sent at 01:02 on Thursday
puǝıɹɟ ʎɯ: ம்ம்.. வை நாட்? நல்லாதான் இருக்கு... யோசிச்து இல்ல.
puǝıɹɟ ʎɯ: அப்பாடி தப்பிச்சாச்சு..

இடையில் இரு புதிர்கள்

Labels:

படித்தவர்களின் கருத்துகள் - 2

At Sat Jul 26, 05:33:00 AM GMT-6, Anonymous Anonymous சொன்னது

ம்ம்ம்ம்.. என்ன நடக்கிறது இங்கே.. ஒரு இழவும் புரியவில்லை எனக்கு..
மன்னிக்கவும் ஜேகே.. எனக்கு உஙக அளவுக்கு அறிவு கிடையாது.. உங்கள் பதிவுகளின் மூழம் நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.

நன்றி

 
At Sat Jul 26, 11:45:00 AM GMT-6, Blogger Jayakumar சொன்னது

அன்புள்ள ஜுபின், இத சும்மா லைட்டா எடுத்துக்கோங்க. ஒரு புது முயற்சியா செய்தேன். பெரிய மேட்டர் இல்ல.

//எனக்கு உஙக அளவுக்கு அறிவு கிடையாது.. உங்கள் பதிவுகளின் மூழம் நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.//

என்னங்க..இப்படியெல்லாம் எழுதி மானத்த வாங்கறிங்க.

உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல