ஜேகேவின் சில குறிப்புகள்

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Wednesday, July 16, 2008

இடையில் இரு புதிர்கள்: அரட்டை

puǝıɹɟ ʎɯ: உன் பதிவு பார்த்தேன்..
ǝɯ: எப்படி இருந்தது?
puǝıɹɟ ʎɯ: எனக்கு அவ்வளவாக புரியலை
ǝɯ: ஹ்ம்ம்ம்...எனக்கும் அப்படித்தான் தோன்றியது. யாருக்கும் புரியாதென்று. எதுவுமே புரியலையா...இல்லை கொஞ்ச கொஞ்சம் புரியலையா?
puǝıɹɟ ʎɯ: விளக்கி சொல்லுடா.. நான் ரொம்ப படிக்கறதில்லை.. இபபோ.. எல்லாம்.. சோ எனக்கு புரியலை. இது எதாவது எழுத்து உத்தி-யா
ǝɯ: அப்படியெல்லாம் ஒரு மண்ணும் இல்ல. சும்மா எழுதினேன்...நான் நினைத்தது எழுத்தில் வரவில்லை போல...படிப்பதற்காவது எளிதாக இருந்ததா இல்லை அதுவும் அயற்சியாக இருந்ததா?
puǝıɹɟ ʎɯ: உன்னோட... கனவு பத்தியா? இல்ல.. நலலா இருந்தது..மயக்க நிலை... பயம்... கனவு ---
ǝɯ: கனவு பற்றினு இல்ல....கனவு நனவு பற்றிய குழப்பம் பற்றியது...
puǝıɹɟ ʎɯ: ம்ம்...இந்த எண்ணம் ... எப்போ தோணியது.. அதிகாலைலயா
ǝɯ: எனக்கு பொதுவாவே.. இப்பொழுது நடப்பது கனவா இல்லை நனவா...அது கனவில்லைனு எப்படி உறுதியா சொல்ல முடியும் போன்ற கேள்விகள் அடிக்கடி வரும்
அதன் விளைவுதான்
Sent at 00:05 on Thursday
ǝɯ: ...இது ஒரு பயங்கர கனவை விவரிப்பது போல இருக்கும் என்று எனக்கும் தோன்றியது...அது மாதிரி இல்லாமல்தான் எழுத முயன்றேன்...ஆனா சரியாக வரவில்லை
puǝıɹɟ ʎɯ: ம்ம்ம்..கனவு மாதிரி இருந்தது...
Sent at 00:08 on Thursday
puǝıɹɟ ʎɯ: இன்னும்... நல்லா...மொழி-ஐ கையாண்டால்.. நீ சொல்லற மயக்க நிலை-யை கொண்டு வர முடியும்-னு தான் தோணுது..ஜெயமோகன் எழுதறார் இல்ல?
ǝɯ: கதையை விபரிப்பனைப் பொருத்தவரையில் எல்லாம் உண்மையிலேயே நடந்திருக்கிறது. ஆனால் அதுவே முன்னுக்குப் பின் முரணாக இருப்பதுவும் அவனுக்குத் தெரிகிறது. அப்படிங்கிற பட்சத்தில ஒரு மூண்றாவது நபர் இந்த விபரிப்பை எப்படி புரிந்து கொள்வார்...
Sent at 00:10 on Thursday
puǝıɹɟ ʎɯ: எனக்கு தெரியலை.. எனக்கு தெரிந்து அதிகாலை.. நேரம் .. இப்படி .. கனவும், நனவும்.... சேர்ந்து வரும்.... மதியம்... தூங்கும்போதும்... வெளித்தூண்டல்களும் கலவையாகி வரும.கனவோடு. மச்சி... நான் உன லெவல்-ல இல்ல-ன்னு தோனுது..நீ... வேற மக்கள்-கூட பேசு..
ǝɯ: ஹா ஹா ஹா....நல்ல ஜோக். நான் இப்ப இலக்கியவாதியா ஆயிட்டேன்....ஏன்னா நான் எழுதுறது அடுத்தவங்களுக்கு புரியல....:)))
Sent at 00:18 on Thursday
puǝıɹɟ ʎɯ: நிறைய ... பிரதி, வாசகன்... அப்படி எல்லாம் படித்து...எனக்கு ஒரே குழப்பமா இருக்கு..எனக்கு ஒன்னும் புரியரதில்லை..
ǝɯ: ஆமாம்....எல்லாரும் ஒரே நேரத்தில் பின் நவீனவியாதிகளாகிட்டாங்க
puǝıɹɟ ʎɯ: தெரியலை... இதுக்கு நான் தயார் செய்துக்கனும்-னு தோனுது.
ǝɯ: வேண்டவே வேண்டாம்...
Sent at 00:20 on Thursday
puǝıɹɟ ʎɯ: உனக்கு.. வரும்.. பின்னூட்டத்துக்கு காத்திட்டு இருக்கேன்...
ǝɯ: யார் போடப்போறா...??
puǝıɹɟ ʎɯ: மக்கள் என்ன சொல்லறாங்கன்னு..வரும் பாரு..
ǝɯ: யாராவது படிச்சாதானே...
Sent at 00:24 on Thursday
puǝıɹɟ ʎɯ: வெய்ட் செய்வோம்..
Sent at 00:25 on Thursday
puǝıɹɟ ʎɯ: நீ... ************-கிட்ட விமர்சனம் கேளு..
ǝɯ: போடா...நீ ஒரு ஆளு....அவய்ங்களுக்கெல்லாம்...ஏற்கனவே நாலு கொம்பு...
puǝıɹɟ ʎɯ: அப்படியா..
Sent at 00:27 on Thursday
puǝıɹɟ ʎɯ: அப்போ...உனக்கு பதிவுலக நண்பர்கள் -- இருக்காங்க இல்ல..அவங்க கிட்ட கேளு..எனக்கு தெரியலை..
ǝɯ: நான் யாருடனும் வைத்துக் கொள்வதில்லை...
puǝıɹɟ ʎɯ: ம்ம்.. வைத்துக்கொண்டால்தானே.... வந்து பின்னூட்டம் போடுவாங்க
ǝɯ: ரொம்ப நாளாச்சே பதிவெழுதி...ன்னுட்டு இதப் போட்டேன்
puǝıɹɟ ʎɯ: நீஒரு குழு-ல இருக்கனும் இல்ல..
ǝɯ: பின்னூட்டம் யாரும் போடனும்னு எல்லாம் எதிர்பார்ப்பதில்லைடா. நான் எழுதுவது என் முதுகை நான் சொறிந்துகொள்ள மட்டுமே...
puǝıɹɟ ʎɯ: :-) அது சரி.
ǝɯ: யாருமே படிக்காட்டுனாகோட எனக்கொன்னும் பிரச்சனயில்ல. நாம பார்க்கிற வேலையயே ஒழுங்கா பாக்கிறதுல்ல...இதுல நாம கதையெழுது வேற வந்துட்டோம்ம்...அதுல எதிர்பார்ப்பு வேற இருந்தா....எனக்கே ஜாஸ்தியா படும்...
puǝıɹɟ ʎɯ: இல்லடா.. நீ... ஒரு ஒத்த கருத்து உடைய மக்கள்-- வைத்து ஒரு குழு உருவாக்கு..
ǝɯ: ஹா ஹா....
puǝıɹɟ ʎɯ: நிஜமா சொல்லறேன்..
ǝɯ: என்னோட ஒத்த கருத்துள்ளவர்கள் என்னை உட்பட யாருமே இருக்க மாட்டார்கள்.....
puǝıɹɟ ʎɯ: எல்லாமும் இல்ல..
ǝɯ: I have MPD...don't you know
puǝıɹɟ ʎɯ: ஒன்னு இருந்தால் போதும்..:-)..அன்னியன் மாதிரி-யா?
ǝɯ: :)..it's not a big deal da...we'll write...always...not for the sake of achieving anything...just for the sake of writing....its as meaningless as we are...and our lives are....
Sent at 00:37 on Thursday
puǝıɹɟ ʎɯ: எனக்கு என்னதோனுதுன்னா.... உன்னோட வாழ்க்கை... குறிக்கோள் இல்லாமல் ..... ஒரு routene-aa போய்ட்டு இருக்கு... and you dont know what to do for that.
ǝɯ: அப்படி வா...இப்ப நீ ஒரு பின்னவீனத்துவ வாசகன் மாதிரி பேசுற....
puǝıɹɟ ʎɯ: அப்போ... நிஜமாகவே.. எனக்கு பின்னவீனத்தும் புரிந்து விட்டதா?? சூப்பர்..
ǝɯ: ஹா ஹா ஹா....
Sent at 00:52 on Thursday
puǝıɹɟ ʎɯ: அப்புறம்... நீ வைத்த... வானவில்-- பேரு... நல்லா இருக்கு..
ǝɯ: :)
puǝıɹɟ ʎɯ: ஓகே..
ǝɯ: முதல்ல அது பெண் கேரக்டர் மாதிரி தோனிச்சா? இல்லையா?
puǝıɹɟ ʎɯ: ஆமாம். பையனுக்கு ... பொருந்தலை--ன்னு தோனுது.
ǝɯ: வானவில்லன் னு வச்சர்லாமா....:)
puǝıɹɟ ʎɯ: கேரக்டர்-ஐ பொண்ணா மாத்திடலாம்..
ǝɯ: கிளிஷே வாகிடுமே...பசங்க பொம்பளைப்புள்ளைங்கள சைட் அடிக்கிறது சகஜம் இல்லயா?
puǝıɹɟ ʎɯ: அட பாவி...
ǝɯ: அப்புறம் ஏன் வானவில் பெண் பெயர்னு நினைக்கிற...அது வளைந்து கொடுப்பதாலா...இதிலிருந்து உன் ஆணாதிக்கக் கூறுகள் வெளிப்படலயா?
puǝıɹɟ ʎɯ: அய்யா...சாமி... ஆளை விடு... . நீ என்கேயோ போய்ட்டெ
ǝɯ: :D
puǝıɹɟ ʎɯ: பெரிய ஆட்கள் கிட்ட பேசறப்பொ... பார்த்து பேசனும். ம்ம்..
ǝɯ: அப்பா....கொஞ்சம் படத்த போட்டாச்சி....
puǝıɹɟ ʎɯ: வானவில்--- பையனை யோசிக்க முடியுதா. உன்னால. என்னால் முடியல
ǝɯ: வை நாட்....
Sent at 01:02 on Thursday
puǝıɹɟ ʎɯ: ம்ம்.. வை நாட்? நல்லாதான் இருக்கு... யோசிச்து இல்ல.
puǝıɹɟ ʎɯ: அப்பாடி தப்பிச்சாச்சு..

இடையில் இரு புதிர்கள்

Labels:

Tuesday, July 15, 2008

இடையில் இரு புதிர்கள்

புத்தம் புது காரின் கதவில் விழுந்த கீறலைப் போல வெளிர் நீல நிறம் கொண்ட மேகங்கள் இல்லாத வானத்தில் நேர் கோடுகளைக் கிழித்துக் கொண்டு சென்ற இரண்டு ஜெட் விமானங்களை அன்னாந்து பார்த்ததில் வலித்த கழுத்தை மெதுவாக கீழே திருப்பும் பொழுது கண்ணில் பட்டவை

  1. எங்கள் வீட்டின் மொட்டை மாடிக்கு அருகில் உயர்ந்து வளர்ந்திருந்த தென்னை மரத்தின் பசுமையான வீராப்புடன் நிமிர்ந்து நிற்கும் குருத்துகளும், காற்றின் தாலாட்டிற்கு மெல்ல தலையசைக்கும் மட்டைகளும், திரட்சியான இளநீர் காய்களும், சிறிய குரும்பைகளும்.

  2. அடுத்த வீட்டின் மொட்டை மாடியில் நடப்பட்டிருந்த கம்பங்களும், கம்பங்களுக்கிடையே கட்டப்பட்டிருந்த கயிறும், கயிற்றில் காய்ந்த துணிகளும், துணிகளுக்கிடையே கிடந்த சில வெள்ளாடைகளும்.

  3. நடுவில் தணிந்திருந்த துணிக்கயிற்றிற்கு மேலாக முளைத்திருந்து அங்கும் இங்கும் நடந்து படித்துக் கொண்டிருந்த 9ம் வகுப்பு வானவில்லும்

  4. கொஞ்சம் தள்ளியிருந்த வீட்டின் பலகனியில் இருந்து வனவில்லையே பார்த்துக் கொண்டிருந்த 11ம் வகுப்பு மலர்வண்ணனும்

இப்படியாகத் தொடங்கிய இந்த காலை எப்படி தொடருமென்ற திடீர் பயம் மனதின் ஓரத்தில் சிறு புள்ளியாகத் தோன்றி வெகு வேகமாக என் உடல் முழுதும் பரவியது. மேற்கொண்டு என் கண்ணில் பட்டவை எதுவும் என் மனதில் பதியவில்லை. இது போன்ற சமயங்களில் எனது பயம் என்னை விழுங்கிவிடத் தொடங்கும். தன்னுணர்வு தப்பி மயக்க நிலையை அடைவேன். நினைவில் நிற்காத கொடூரமான கனவுகள் என் மனதை பாராங்கல் கொண்டு நசுக்கும். என் சுவாசத்துளைகள் நெறிக்கப்பட்டு மூச்சு முட்டி கண்கள் பிதுங்கும். அது போன்றதொரு மயக்க நிலை என்னைத் தழுவிக் கொண்டிருக்கும் பொழுதுதான் கேட்டது அந்தச் சத்தம்.

மீண்டும் அன்னாந்து பார்த்தேன். வானைக் கீறிக் கொண்டிருந்த இரண்டு விமானங்களும் தீப்பிழம்புகளாக கீழெ விழுந்து கொண்டிருந்தன. என்னை எழுப்பிய அந்தச் சத்தம் அவை மோதி வெடித்ததாக இருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்று அவதானிப்பதற்குள் விமானத்தின் சில பாகங்கள் என் தலையை நோக்கி வீழ்வதுபோலத் தோன்றியது. மிகுந்த வேகத்துடன் அதிலிருந்து தப்பிக்க நகர முயற்சித்த சில கனங்களுக்குள் அவை வானவில்லின் மாடியில் நாராசமான சத்தத்துடனும் சுட்டெரிக்கும் நெருப்புடனும் விழுந்தன. நானும் மலரும் ஏக காலத்தில் "அய்யோ" என்று கத்தினோம்.

“ஏ உனக்கு என்னாச்சு" சத்தமிட்டுக்கொண்டே வானவில்லை நோக்கி ஓடினேன்.

அதே கணத்தில் “ஏ உனக்கு என்னாச்சு" என்று வானவில்லின் குரல் சன்னமாகவும், பயங்கரமாகவும் எனக்கு கேட்டது. இதயம் வெடித்துவிடும் அளவிற்கு வேகமாக துடிக்க வானவில்லை நோக்கி நகர்வதை நிறுத்தி விட்டு அவதானித்த பொழுது வானவில் நலமாகத்தானிருந்தான். அவனது மாடியில், மேலிருந்து விழுந்த விமானத்தின் பாகங்கள் இல்லை, நெருப்பில்லை, புகையில்லை. அவன் மட்டும் மிகுந்த மிரட்சியுடன் என்னை நோக்கி இரண்டு கைகளை நீட்டியவாறு வாயடைத்து நின்றிருந்தான்.

“என்ன இழவு நடக்கிறது இங்கே" என்று கேட்டுக்கொண்டு சுற்றிலும் பார்த்த பொழுதே தெரிந்தது, மொட்டை மாடியிலிருந்து கீழே விழ நான் எடுத்து வைக்க வேண்டியது இன்னும் ஒரு அடி என்று. வானவில்லைப்பற்றிய கவலை போய், உயிர் பயம் என்னைக் கவ்விக்கொண்டது. உடல் நடுக்கமாகவும் சில கேவல்களுடன் கூடிய அழுகையாகவும் என் பயம் வெளிப்பட்டது. "தட்"டென்று தரையில் அமர்ந்து தவழ்ந்தபடியே நகர்ந்து சென்றேன்.

பாதுகாப்பான இடத்திற்கு வந்த நிலையில் உயிர்பயம் சற்று விலகியிருந்தாலும் உடல் நடுங்கிக் கொண்டேயிருந்தது. அழுகையையும் நிறுத்த முடியவில்லை. அப்படியே உடலைச் சாய்த்து மால்லாந்து படுத்து மேலே பார்த்த பொழுது, பளிச்சென்ற நீல நிற வானம் இருந்தது, வெளிர் நிற கோடுகளைக் காணவில்லை, ஜெட் விமானங்களைக் காணவில்லை, 9ம் வகுப்பு வானவில்லைக் காணவில்லை, 11ம் வகுப்பு மலர் வண்ணனைக் காணவில்லை.

என் கண்ணில் பட்டவை அங்கே குருதியும், தசையுமாகச் சிதறிக்கிடந்த மிகுந்த அயற்சியையும் சோகத்தையும் தரும் இரண்டு கேள்விகள்.
  • காலை நடந்தவற்றில் எவை உண்மை? எவை கனவு?
  • எனக்கு இப்பொழுது உயிர் இருக்கிறதா? இல்லையா?

Labels: