ஜேகேவின் சில குறிப்புகள்: November 2007

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Monday, November 19, 2007

வேடந்தாங்கல், கரிக்கிலி - பறவைகளுடன் ஒரு நாள்

வேடந்தாங்கலில் பறவைகள் சீசன் ஆரம்பித்துவிட்டதும் கடந்தவாரம் நண்பருடன் அங்கு சென்றிருந்தேன். சென்னையிலிருந்து 70கிமீ தூரத்தில் இருக்கும் வேடந்தாங்கலுக்கு மோட்டார் சைக்கிளிலேயே சென்றோம். நவம்பர் மாதத்தின் தன்மையான தட்பவெப்பநிலையின் ஒத்துழைப்பால் போகும்போது பயனம் ஓரளவிற்கு இனிமையாகவே இருந்தது. சரணாலய ஏரியில் பறவைகள் நிறைந்து காணப்பட்டன. பறவைகள் பெரும்பாலும் ஏரிக்கரையிலிருந்து தொலைவிலேயே இருக்கின்றன. எங்களிடம் தொலைநோக்கியோ ஸூம் அதிகம் கொண்ட கேமராவோ இல்லை. அதனால் பறவைகளை கூர்ந்து அவதானிக்கவோ படம் எடுக்கவோ முடியவில்லை. அடுத்த முறை நல்ல தொலைநோக்கியுடன் செல்லவேண்டும்.






ஏரிக்கரையின் நடைபாதையின் இருமருங்கிலும் வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகளைப்பற்றிய குறிப்புகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதிவைத்திருக்கிறார்கள். மண்வெட்டி வாயன்(Spoon Bill), பாம்பு தாரா(Darter), சாம்பல் நிற கூழைகடா(Grey Pelican), நத்தை குத்தி நாரை(Openbill Stork) போன்ற பறவைகளின் தமிழ்பெயர்கள் மிக இரசிக்கத்ததாக இருந்தன. சரணாலயத்திற்கு வெளியேயும் பறவைகள் பற்றிய பல தகவல்களை ஒரு அறையினில் எழுதி வைத்திருக்கிறார்கள்.


வேடந்தாங்கலைச் சுற்றிவிட்டு திரும்பும் வழியில் கரிக்கிலி என்ற மற்றொரு பறவைகள் சரணாலயத்திற்கான வழி அறிவிப்பு பலகைகளை கண்டோம்(வேடந்தாங்கலில் இருந்து உத்திரமேரூர் சொல்லும் வழியில் உள்ளது கரிக்கிலி). கரிக்கிலி சரணாலயத்தைப்பற்றி கேள்விப்படுவது அதுதான் முதல் முறை. எனவே ஒரு ஆச்சரியட்துடன் அங்கேயும் சென்றோம். எதிர்பார்த்தது போல அங்கு பார்வையாளர்கள்(வனத்துறை அதிகாரிகள் கூட) யாருமே இல்லை. ஆனால் பறவைகள் ஓரளவிற்கு இருந்தன. வேடந்தாங்கலை விட மிக அமைதியான இடம்.


கரிக்கிலியிலிருந்து உத்திரமேரூர் சென்றுவிட்டு சென்னை திரும்பினோம். போகும் போது ஒத்தாசையாக இருந்த வானம், திரும்பும் போது மழையாய் பொழிந்து தொப்பலாக நனைத்துவிட்டது

Labels: ,

உத்திரமேரூர் சதிர்வேதி மங்கலத்து சோழர் கல்வெட்டுகள்

தமிழகத்தின் மக்களாட்சி பாரம்பரியத்திற்கு உதாரணமாக ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உத்திரமேரூர் கல்வெட்டுகளில் காணப்படும் குடவோலை முறை வாரியத்தேர்தல் பற்றிய குறிப்புகளை பலர் மேற்கோள் காட்டுவார்கள். சிறு வயதில் பள்ளிகளில் வரலாறாகவும், பிற்காலங்களிலும் இதைப்படிக்கும் பொழுதெல்லாம் புலகாங்கிதம் அடைந்தது உண்டு.

சமீபத்தில் சோழர் வரலாற்றை ஆழமாக படித்த போதுதான் உத்திரமேரூர் கல்வெட்டுகளின் முழுமையான பரிமாணம் புரிந்தது. உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலம் சோழர்களால் பார்ப்பனர்களுக்கு தானமாக கொடுக்கப்பட்ட 12 சேரிகளை உள்ளடக்கிய ஊர்களாகும். அந்த சதுர்வேதி மங்கலத்தின் தோட்டம், ஏரி போன்றவற்றிற்கான வாரியங்களை நாட்டாமை செய்பவருக்கான தேர்தல் முறையையே இந்த கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

இந்த தேர்தல்களில் எந்த ஜனநாயகக் கூறுகளும் இல்லை. சாதியக்கூறுகள் மட்டுமே உள்ளன. 12 சேரிகளை பார்ப்பனர்களுக்கு தானமாக கொடுத்ததிலிருந்து, குடவோலை தேர்தல் முறை வரை ஒவ்வொன்றும், சோழர்கள் காலத்தில் மனு நீதி எவ்வாறு கட்டி காக்கப்பட்டது என்பதற்கு உதாரணங்களாகத்தான் இருக்கின்றன. இதை நினைத்து பெருமைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அவமானப்படுவதே பொருத்தமாக இருக்கும். இரண்டு வாரங்களுக்கு முன் உத்திரமேரூர் சென்றபொழுதும் அவ்வாறே இருந்தது.

வைகுந்த பெருமாள் கோயில்


புகழ்பெற்ற கல்வெட்டுகள் நிரம்பிய பக்கச்சுவர்கள்

பக்கச்சுவற்றில் ஒரு பகுதி - ஒரு கல்வெட்டு

சோழர்கால உள்ளாட்சி தேர்தல் முறையை விளக்கும் கல்வெட்டின் பிரதி - கல் 1




கல் 2

உள்ளாட்சி தேர்தலில் பங்குபெறுபவர்களுக்கான தகுதிகளை விளக்கும் இக்கல்வெட்டை கவனியுங்கள்.

1) கால்வேலி நிலமாவது தேவை
2) தன் மனையில் வீடு இருத்தல் வேண்டும்
3) வயது முப்பத்தைந்துக்கு மேல் எழுபதுக்குள் இருக்க வேண்டும்
4) வேதபாஷ்யங்கள், மந்திர ப்ராம்மணம் இவற்றில் எடுத்துரைக்கும் புலமை வேண்டும்
5) ஆசாரம் வேண்டும்
6) முந்தின மூன்றாண்டுகளுக்கு இப்பதவி வகிக்காதவனாக இருக்கவேண்டும்

ஆறில் நான்கு சாதியைச் சார்ந்த தகுதிகள்(தானமாக கொடுக்கப்பட்ட சதுர்வேதி மங்கலத்து நிலங்கள் எல்லாம் பார்ப்பனர்களுக்கே சொந்தம்). இதிலேயே பல்லிளித்துவிட்டது உள்ளாட்சியில் மக்களாட்சியின் இலட்சனம்.

கல் 3

பக்கச்சுவர்றில் ஏராளமான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மேற்காணப்பட்டவை ஒரு சிறு பகுதிதான். மீதமுள்ள கல்வெட்டுகளில் காணப்படும் செய்திகளைத்தாங்கிய புத்தகம் ஏதாவது இருக்கிறதா எனத்தெரியவில்லை

Labels: , , ,