ஜேகேவின் சில குறிப்புகள்: தமிழனாக இருப்பதை விட எருமையாக இருப்பதின் நன்மைகள்

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Thursday, April 30, 2009

தமிழனாக இருப்பதை விட எருமையாக இருப்பதின் நன்மைகள்



நன்றி:
அனாதை ஆனந்தன்
NegativeSpace Media

Labels: ,

படித்தவர்களின் கருத்துகள் - 1

At Fri May 01, 11:47:00 PM GMT-6, Blogger வாதி சொன்னது

Dear Corade, Please read this article - rajiv rufus

உதம் சிங் என்னும் விடுதலைப் போராட்ட வீரனை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொண்டு .. அத்துடன் ஒரு ஒற்றுமை நமக்கும் உள்ளது என்பதைக் காட்டவே உங்களுக்கு இந்த அறிமுகம். பகத்சிங்கை நமக்குத் தெரியும். இளம் நெருப்பை நெஞ்சினில் நிறுத்தி பிரித்தானிய அரசாங்கத்தை வலிமையான போராட்டத்தின் மூலமே வெளியேற்றி தாய்நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற வேண்டும் என்ற கொள்கை கொண்டு தீவிரமாக போராடிய பகத்சிங்குடன் துணையாக உதம்சிங்கும் இருந்தான் என்றால் உங்க்ளால் அவரை புரிந்து கொள்ள முடியும். இவர்களின் தீவிர நடவடிக்கைகளைக் கண்டு தீவிரவாதி என பிரித்தானிய அரசு அறிவித்தது.

இதற்கிடையே ஜாலியன் வாலாபாக் படுகொலை என்ற ஒன்றை நமது சமூக அறிவியல் பாடங்களில் படித்திருக்கிறோம். கி.பி 1919 ஆம் ஆண்டு ஏபரல் 13 ல் மருத்துவர்கள் சத்யா பால், சய்புதீன் கிட்ச்லாவின் கைதைக் கண்டித்தும், பிரித்தானிய அரசுக்கு எதிராகவும் ஜாலியன் வாலாபாக் பூங்கா என்னும் இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கிட்டத்தட்ட இருபதாயிரம் மக்கள் கலந்து கொண்டனர். தீவிரமான சுதந்திர போராட்ட செயல்களில் ஈடுபட்டிருந்த இளைஞரான உதம்சிங் அப்போது மக்களுக்கு தண்ணீர் ஊற்றிக் கொடுக்கும் பணியிலிருந்தார்.

அந்நேரத்தில் 90 ராணுவ வீரர்கள் ஜெனரல் டயர் என்னும் அதிகாரியின் தலைமையில் அங்கே குழுமியிருந்தனர். சரியாக மாலை 5 15 மணிக்கு பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் எந்தவித எச்சரிக்கையுமின்றி மக்களை நோக்கி சுட்டு வீழ்த்த டயர் கட்டளையிட்டான். பத்து நிமிடங்கள் சரசரவென பாய்ந்த குண்டுகள் ஆயிரக்கணக்கானவர்களின் உடல்களை துளைக்க ஆரம்பித்தது. வெளியே செல்ல ஒரே வழியைக் கொண்டிருந்த பூங்காவினால் மக்களால் எளிதில் வெளியேற முடியவில்லை. பூங்காவின் சுவர்களிலும், கிணறுகளிலும் உயிரைக் காப்பாற்ற குதித்து தப்பிக்க முயன்றனர்.

இப்படுகொலையில் 379 பேர் கொல்லப்பட்டார்கள், ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயம்பட்டார்கள். இப்படுகொலையில் தப்பித்த எண்ணற்றவர்களில் உதம்சிங்கும் ஒருவர். இதில் ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகவும் கருதப்படுகிறது. பிரித்தானியர்களுக்கு எதிராக தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காகவும், போராட்டம் நடத்தும் மக்களுக்கு பாடம் கொடுத்து எச்சரிக்கவும் இப்படுகொலைக்கு முக்கிய காரணியாக பஞ்சாபின் கவர்னராக இருந்த மைக்கேல் ஓ டயர் என்பவரே ஆவர்.
இந்நிகழ்வு உதம்சிங்கை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி தனது வாழ்வின் திருப்புமுனையாக ஏற்படுத்தியது. அதன் விளைவாக தனக்குள் அமைதியான உறுதிமொழியை மேற்கொண்டு படுகொலைகளுக்கு காரணமாய் இருந்த கவர்னரை கொலை செய்து உயிரிழந்த மக்களுக்கு சமர்ப்பிக்க சபதம் எடுத்தார்.

அந்நேரத்தில் கவர்னராக இருந்த மைக்கேல் ஓ டயர் மாற்றாலாகி விட்டிருந்தார்.
பல்வேறான பெயர்களில் பல நாடுகளுக்கு பயணித்து மைக்கேல் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க ஆரம்பித்தார். 1920 ல் ஆப்பிரிக்கா சென்றார், பின் 1921 ல் நய்ரோபி சென்றார். அமெரிக்கா சென்றும் கண்டுபிடிக்க முயற்சி செய்து தோல்வியுற்றார். விடுதலைக்கான புரட்சியில் அமெரிக்காவில் மூன்று வருடங்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களுடன் பணியாற்றினார். கி.பி 1927 ல் இந்தியா திரும்பினார். பின்னர் லைசென்ஸ் இல்லாத ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் வைத்திருந்த காரணத்திற்காக 1921 ல் கைதானார். இவ்விசாரணையில் 5 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 1931 ல் விடுதலை செய்யப்பட்ட உதம்சிங் பஞ்சாப் சென்று பெயிண்ட்டராக வேலை செய்து கொண்டே புரட்சிக்கான பணிகளிலும் கவனம் செலுத்தினார். அத்துடன் டயரை கொலை செய்யும் தனது முயற்சியையும் கைவிடவில்லை. 1933 ல் காஷ்மீர் சென்ற உதம்சிங் போலி வேடம் பூண்டு ஏமாற்றி ஜெர்மனிக்குச் சென்றார். 1934 ல் லண்டனை அடைந்த சிங் 9 அட்லர் ஸ்டிரீட், கமெர்சியல் ரோடு ல் வீடு எடுத்து தங்கினார். தனக்கென தனியாக கார் வாங்கி தனது பயணத்துக்கு உபயோகித்துக் கொண்டார். டயரின் இருப்பிடத்தை தெரிந்து கொண்ட மைக்கேல் நிறைய வாய்ப்புகள் கிடைத்தாலும் சரியான வாய்ப்புக்காகவும் உலகமனைத்திற்கும் கொண்டு செல்லும் வாய்ப்புக்காகவும் காத்திருந்தார்.

கடைசியாக அந்த வாய்ப்பு 21 வருடங்கள் கழித்து 1940 ஆம் வருடம் மார்ச் 13 ம் நாளில் வந்தது. கிழக்கு இந்திய சங்கமும், ராயல் செண்ட்ரல் ஆசியன் சொஸைட்டியும் இணைந்து காக்ஸ்டன் ஹாலில் நடத்திய சந்திப்பிற்கு மைக்கேல் ஓ’டயர் பேச்சாளராக வந்திருந்தார். தனது புத்தகத்தில் மறைத்து வைக்கப்பட்ட துப்பாக்கியுடன் காக்ஸ்டன் ஹாலுக்கு நுழைந்தார். சந்திப்பு முடிந்ததும் கூடியிருந்தவர்கள் எழுந்து நின்றனர், அந்நேரத்தில் மற்றொருவருடன் பேசுவதற்காக நகர்ந்த மைக்கேல் டயரை நோக்கி சிங் இரண்டு முறை சுட்டார். மைக்கேல் டயர் அந்த இடத்திலேயே இறந்தார். அத்துடன் இந்தியாவின் செய்லாளராக இருந்த லார்ட் செட்லாண்டையும், சர் லூயிஸ் டேனையும், லார்ட் லாமிங்டனையும் சுட்டார். இவர்களனைவரும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். தனது பணியை முடித்த சிங் தப்பிக்க முயலவில்லை. பின் அங்கேயிருந்த காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வீரச்செயலைக் கேள்விப்பட்ட இந்திய பொது ஜனங்கள் உதம்சிங்கை ஒரு கதாநாயகனாக பார்த்தனர். சிங்கின் செயலுக்கு மிகுந்த மரியாதையையும், பிரித்தானிய அரசை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்ற முடிவையும் மக்கள் மனங்களில் கொண்டு வந்தது. இந்நிகழ்வு 1942 ல் மகாத்மா காந்தி நடத்திய வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்கும், 1947ல் கிடைத்த சுதந்திரத்திற்கும் அடிப்படைக் காரணமாய் அமைந்திருந்தது.

இந்நிகழ்வினைக் கண்டித்த மகாத்மா காந்தி பின்வருமாறு பத்திரிகைக்கு எழுதினார்.

”the outrage has caused me deep pain. I regard it as an act of insanity...I hope this will not be allowed to affect political judgement"”

ஒரு வாரத்திற்கு பிறகு தனது பதிப்பான “ஹரிஜன்” பத்திரிக்கையில் பின்வருமாறு எழுதினார்.

"We had our differences with Michael O'Dwyer but that should not prevent us from being grieved over his assassination. We have our grievances against Lord Zetland. We must fight his reactionary policies, but there should be no malice or vindictiveness in our resistance. The accused is intoxicated with thought of bravery"

ஜவஹர்லால் நேரு தனது நேஷனல் ஹெரால்டுவில் பின்வருமாறு எழுதினார்.

"Assassination is regretted but it is earnestly hoped that it will not have far-reaching repercussions on political future of India. We have not been unaware of the trend of the feeling of non-violence, particularly among the younger section of Indians. Situation in India demands immediate handling to avoid further deterioration and we would warn the Government that even Gandhi's refusal to start civil disobedience instead of being God-send may lead to adoption of desperate measures by the youth of the country"

சுபாஷ் சந்திரபோஸ் மட்டுமே உதம்சிங்கின் செயலை பகிரங்கமாக வரவேற்று பேசினார்.

மக்களின் மனதில் பெரும் மகிழ்வை ஏற்படுத்திய இந்நிகழ்வுகள் மக்களை பழிக்குப் பழிவாங்கியாயிற்று என அமைதிப்படுத்தியதுடன் உதம்சிங்கை தமது கதாநாயகனாக ஏற்றுக் கொண்டார்கள். அத்துடன் உலக ஊடகங்கள் பலவும் ஜாலியன் வாலாபாக் கதையினை தெரிந்து கொண்டன. அத்துடன் டயரின் பங்கையும் தெளிவு படுத்தின. சிங்கை ஒரு விடுதலைப் போராட்ட வீரனாகவும், பயங்கரமாக படுகொலை செய்யப்பட்ட மக்களின் எதிர்விளைவாகவும் லண்டனின் டைம்ஸ் பத்திரிக்கை அங்கீகரித்தது. டயர் இலண்டனில் தான் கொலை செய்யப்பட்டார் எனபது குறிப்பிடத்தக்கது. ஜெர்மன் வானொலி ”மக்களின் அழுகுரல் துப்பாக்கி தோட்டாக்களாக பேசியது” என தொடர்ந்து ஒளிபரப்பினர்.

இதனிடையே கொலைக்கான விசாரணையில் நீதிபதிகள் கேட்ட கேள்விக்கு “நான் தான் கொலை செய்தேன், ஏனெனில் அவர் மேல் எனக்கு ஏற்பட்ட வன்மத்திற்கு பழிவாங்கினேன். மற்றும் கொலையாவதற்கு தகுதியானவர் தான்” என பகிரங்கமாக ஒத்துக் கொண்டார்.

விசாரணை முடிவில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, 1940 ஜூலை 31ல் தூக்கிலிடப்பட்டார். மற்ற கைதிகளைப் போல சிறைக்குள்ளாக அமைக்கப்பட்டிருந்த இடமொன்றில் புதைக்கப்பட்டார். 1940 மார்ச்சில் நடந்த இப்படுகொலையைக் கண்டித்த இந்திய காங்கிரஸ் தலைவர்களில், 1962ல் ஜவஹர்லால் நேரு ”டெய்லி பிரதாப்” ல் “தூக்கு கயிற்றிற்கு முத்தம் கொடுத்த உயிர் நீத்த ஷாஹீத்-ஐ-அஸாம் உதம் சிங்கிற்கு எனது வீரவணக்கத்தைத் தெரிவிக்கிறேன்” என புகழாராம் சூட்டினார்.

இதன் பின்னர் ஜூலை 1974ல் சுல்தான் லோதியின் எம்.எல்.ஏ சாது சிங் தின்னின் பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு வேண்டுகோள் விடுத்தார். அவ்வேண்டுகோளின் பேரில் இந்திரா காந்தி பிரித்தானிய அரசிடம் உதம் சிங்கின் உடலை ஒப்படைக்க கோரினார். உதம் சிங்கின் உடலைக் கொண்டு வர சாது சிங்கே இங்கிலாந்து சென்று உதம் சிங்கின் உடலைப் பெற்று வந்தார். தில்லி விமான தளத்தில் இறங்கிய சிங்கின் உடலை சங்கர் தயாள் சர்மா, பஞ்சாப் முதலமைச்சர் ஜெய்ல் சிங் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இவர்களுடன் பிரதமராக இருந்த இந்திரா காந்தியும் சென்று மரியாதை செய்து பஞ்சாபிலுள்ள சுனம் என்னும் உதம்சிங்கின் பிறந்த ஊரில் எரிக்கப்பட்டார். அவரை எரித்தபின் அவருடைய சாம்பல் கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டது.


பகத்சிங்கை கேள்விப்பட்டிருப்போம், ஆனால் உதம் சிங்கை நிறைய பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். தினமலரில் வெளியான ஒரு கட்டுரையில் “அகிலேஷ்” என்னும் பெயரில் இடப்பட்டிருந்த மறுமொழியைக் கொண்டே இக்கட்டுரையை விரிவாக்கியிருக்கிறேன்.

இக்கட்டுரைக்கான நோக்கத்தை தற்போது காண்போம்.

இடம்: ஜாலியன் வாலாபாக்
காரணம்: மக்களை ஒடுக்குவதற்காக
பொறுப்பாளர்: மைக்கேல் ஓ டயர், பஞ்சாப் கவர்னர்

விளைவு : 400க்கு அதிகமானோர் பலி
1000க்கும் மேற்பட்டோர் படுகாயம்.
கற்பழிப்புகள் : இல்லை


இந்தியனாய் தனது தேசத்தில் நடைபெற்ற ஒரு படுகொலைக்கு பழிவாங்க திட்டமிட்டு 21 வருடம் காத்திருந்து கொலைகளுக்கு காரணமானவரை இந்தியன் ஒருவர் அவருடைய நாடுக்கே சென்று பழிவாங்கியிருக்கிறார். அவர் இந்தியர்களால் ஒரு தியாகியாகவும், சுதந்திர போராட்ட வீரராக மக்களாலும், தலைவர்களாலும் போற்றப்படுகிறார்.

இந்நிகழ்வை ஒத்த ஒரு நிகழ்வுகளும் ஒன்று இருக்கிறது.




இடம்: தமிழீழம்
காரணம்: மக்களை ஒடுக்குவதற்காக
பொறுப்பாளர்: ராஜிவ் காந்தி, இந்திய பிரதமர்

விளைவு : 5400க்கு அதிகமானோர் பலி
5000க்கும் மேற்பட்டோர் படுகாயம்.
கற்பழிப்புகள்: 800

இலங்கையில் சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனைகளால் வெடித்துக் கொண்டிருக்கும் பல்வேறு உயிரழப்புகளுக்காக அனுதாபம் அப்பிரச்ச்னையை தீர்த்து அமைதி ஏற்படுத்திட ( குறித்துக் கொள்ளுங்கள் “அமைதி” ஏற்படுத்திட தான்..) ”இந்தியா அமைதிப் படை” (Indian Peace Keeping Force) என்னும் பெயரில் இலங்கை சென்று ராஜிவ் காந்தி - ஜெயவர்த்தனா ஒப்பந்தம் என்ற பெயரில் ஒப்பந்தம் ஒன்றை எழுதி தயாரித்து அதை ஒத்துக்கொள் என போராட்டத்திற்கு போரிடும் தமிழர்களிடம் கட்டாயப்படுத்தி, பின் ஆயுதம் ஏந்தி ஒடுக்க நினைத்து, போராக வெடித்து கிட்டத்தட்ட 6500 பேர்களின் உயிர்களை வாங்கி, ஆயிரக்கணக்கானவர்களை காயப்படுத்தி, கொடுமைப் படுத்தி, சொல்லவே கூசும் வகையிலான 800 பெணகளைக் கற்பழித்து, கொடுமையினால் கொதிப்படைந்து கிடப்பவனை மேலும் கொடுமைகளுக்கு ஆட்படுத்தி தாயகம் திரும்பிய அமைதிப் படைகளுக்கும், அவர்கள் செய்த தவறுகளின் முழுப்பொறுப்பிற்கும் சொந்தக்காரரான ராஜிவ் காந்தி 6000 தமிழர்களின் கொலைகளுக்கு பழியாக இலங்கைத் தமிழர் சிலரால் கொல்லப்படுகிறார்.

இக்காரணங்களைக் கொண்டு இவ்விரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிடமுடியாது என்றாலும் மனிதர்களின் உணர்வுகளால் ஒன்றாகத் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியனாக உதம்சிங்கை தியாகி என பார்க்கும் மக்களின் மனப்பாங்கை தமிழர்களாய் பார்க்கும் மனங்களை தீவிரவாதிகள் எனும் பார்வை கொண்டு நோக்குவதை எங்ஙனம் ஏற்றுக் கொள்ள முடியும்?

நாம் நமது இனத்திற்கான பழிதீர்த்தலை தியாகம் என்கிறோம் ! அதையே மற்றவர்கள் செய்தால் தீவிரவாதம் என்னும் வாதத்தை எப்படி ஏற்பது? இதை ஒரு இந்தியனாக, தமிழனாக பார்க்க வேண்டாம், ஒரு மனிதாக இருந்து தீர்மானித்துச் சொல்லுங்கள் எது தீவிரவாதம், எது தியாகம் என்று.


இவ்விடயங்களில் புதிராய் பேசும் தமிழல்லாதவர்களுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்ப வேண்டும் என நினைத்தேன். ஆனால் அதற்கு முன்னால் வியாக்கியானம் பேசும் சில தமிழர்களல்லவா புரிந்து கொள்ள வேண்டும் எனற முனைப்புடன் விரிவாக எழுதியிருக்கிறேன். அத்துடன் அகிலேஷ் தினமலர் கட்டுரையில் இட்ட ஒரு மறுமொழியை தெளிவாக படித்து தாங்களை தாங்களே தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.

வாழ்க தமிழுடன்,

தமிழ் நிலவன்.


அகிலேஷின் பின்னூட்டம்.


“ஒரு பெண் தன் கற்பை காப்பற்றி கொள்ள தன் நகங்களை ஆயுதமாக பயன் படுத்தி எதிரியை கொல்லலாம் மற்றும் என் சகோதிரியின் கற்பு பரி போகும் போது நிச்சயமாக் என்னால் அகிம்சையை கடை பிடிக்க முடியாது”
- மகாத்மா காந்தி

1981 October 31 இந்திரா காந்தி அவரது பாது காவலலார்கலாலே சுட்டு கொல்லபடுகிறார். அவர்களுடைய பெயர் Satwant Singh மற்றும் Beant Singh. அதாவது இந்தியாவின் பிரதமரை தன் உயிரை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டிய இந்தியா ராணுவ வீரர்களே தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக சுட்டு கொள்கிறார்கள்.
இந்திரா காந்தியை கொன்றவர்களில் ஒருவன் அப்பொழுதே கொல்லப்டுகிறார்.... மற்றொருவன் மூன்று ஆண்டுகள் கழித்து கொல்லபடுகிறான். சீக்கிய குருமார்கள் இந்திரா காந்தியை கொன்றவர்களை சீக்கிய இனத்தின் தியாகியாக அறிவித்து இருகிறார்கள்!!!!

400 மக்களை கொன்றதற்கு உதம் சிங்கிற்கு இவ்வளவு வெறி வருமானால்.....
அதை விட 15 மடங்கு அதிகமான மக்களை (400 பேர் எங்கே - 6200 பேர் எங்கே) இந்திய அமைதி படை கொன்றதற்கு ஈழ தமிழனுக்கு எவ்வளவு வெறி வர வேண்டும்..... வந்தது.
பின் அவர்கள் செய்தால் மட்டும் குற்றமா?

அவர்கள் செய்தால் தீவிரவாதி பட்டம்... நாம் செய்தால் தியாகி பட்டமா?
நல்ல நியாம்டா சாமி..............சிறிது கூட விடுதலை உணர்வு என்றால் என்ன அல்லது இன பற்று என்றால் என்ன என்று தெரியாத பதவிக்காக ** தின்னும் மனிதர்களுக்கு, இந்த நியாங்கள் அனைத்தும் எங்கே புரிய போகிறது.......
ஆனால் ஒருவருக்கு புரிந்தது.....

''ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய அமைதிப்படையில் பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங்கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார்.. இலங்கைக்குப் போன படை இந்தியா திரும்பியவுடன், யோணன் சிங்குக்கு வீர சர்க்கார் விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த செய்தியை தன் அப்பாவிடம் தெரிவித்த யோணன், விருது விழாவுக்கு அவரையும் அழைத்திருக்கிறார்.
ஆனால் ரன்பீர் சிங்கோ, 'இன விடுதலையை அடக்குவதற்காகக் கொடுக்கப்படும் விருதை நான் வீர விருதாகவே கருத மாட்டேன். அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர வேண்டாம். அந்த விருதை நீ வாங்கினால், நமக்குள் எந்த உறவும் இருக்காது' என்று சொல்ல...
யோணன் அந்த விருதையே புறக்கணித்திருக்கிறார்!''
ரன்பீர் சிங் ஒன்றும் தமிழர் இல்லையே..... பிறகு எப்படி ரன்பீர் சிங்கிற்கு புரிந்த ஈழ போராட்டத்தின் நியாயம் இங்கு இருக்கும் ஏராளமான தமிழகம் மற்றும் இந்திய நாதரிகளுக்கு புரிவதில்லையே ஏன்?

ஏன் எனில் அந்த நாதரிகளுக்கு சுதந்திரம் என்பது ஓசியில் கிடைத்தது மற்றும் அடிமை வாழ்கை என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியாது................
மேலும் ஒரு விஷயத்தை சொல்கிறேன்....................
1981 October 31 இந்திரா காந்தி அவரது பாது காவலலார்கலாலே சுட்டு கொல்லபடுகிறார். அவர்களுடைய பெயர் Satwant Singh மற்றும் Beant Singh. அதாவது இந்தியாவின் பிரதமரை தன் உயிரை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டிய இந்தியா ராணுவ வீரர்களே தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக சுட்டு கொள்கிறார்கள்.
இந்திரா காந்தியை கொன்றவர்களில் ஒருவன் அப்பொழுதே கொல்லப்டுகிறார்.... மற்றொருவன் மூன்று ஆண்டுகள் கழித்து கொல்லபடுகிறான். சீக்கிய குருமார்கள் இந்திரா காந்தியை கொன்றவர்களை சீக்கிய இனத்தின் தியாகியாக அறிவித்து இருகிறார்கள்!!!!

இப்பொழுது இந்திய அரசு ( காங்கிரஸ் ) என்ன செய போகிறது...
பிரதமரை கொன்றவனை தியாகிகள் என்று அறிவித்த இனத்தை தீவிரவாத இயக்கம் என்று சொல்லி தடை செய்திருக்க வேண்டாமா? ஏன் செய்ய வில்லை மாறாக அவர்களுக்கு பிரதமர் பதவி கொடுத்து அழகு பார்கிரிர்கலே அது ஏன்?
அப்படி எனில் ராஜிவ் காந்தியை கொன்றது சுபாதானே?
சுபாதான் அப்பொழுதே இறந்து விட்டாலே...

அதோடு சுபா கூட இருந்த ஐந்து பேரும்(ஒற்றை கண் சிவராசன் – உட்பட) பெங்களூரில் உள்ள வீட்டில் சயனைடு சாபிட்டு இறந்து விட்டார்களே பின் ஏன்?
இந்த வழக்கில் மேலும் நளினி, பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியார் 17 ஆண்டுகளுக்கு மேல் தனிமை சிறையில் வாடுகின்றனரே அது ஏன்?
இதற்கு மேலும் விடுதலை புலிகளுக்கு மட்டும் தடை ஏன்???
இங்கு பிரபாகரன் பெயரை சொன்னாலே தேசிய பாதுகாப்புக்கு சட்டம் பாயுமாம்....... (NSA)
ஆனால் சீக்கிய மடம் இந்திரா காந்தியை கொன்றவனை தியாகி என்கிறது..... !!!!!!
எதெற்கெடுத்தாலும் நான் இந்தியன் பிறகு தமிழன் என்று சொல்லும் அறிவு ஜீவிகளே இதற்கு நீங்கள் என்ன சொல்ல போகிறிர்கள்?
தமிழர்களில் இருக்கும் கருங்காலி கூட்டம் சீகியர்களிடம் இல்லை..
இப்படி வரலாற்று உண்மைகளை எடுத்து சொல்லி சீக்கியர்களுக்கு இப்படி நடக்கிறது, தமிழர்களுக்கு மட்டும் ஏன் அநியாயம் செய்கிரிகள் என்று கேட்டால் நாம் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசுகிரோமாம் மற்றும் நாங்கள் எல்லாம் விடுதலை புலிகள் ஆதரவாளர்களாம்..........
அட நாய்களே.....
நியாத்தை கேட்பதற்கு நான் ஒன்றும் புலியாக இருக்க தேவை இல்லை…..
இந்தியனாக இருக்க தேவை இல்லை…..
தமிழனாகவோ இருக்க தேவை இல்லை
மனிதனாக இருந்தால் போதும்.....

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல