ஜேகேவின் சில குறிப்புகள்: காதலற்ற கவிதை

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Wednesday, July 30, 2008

காதலற்ற கவிதை

நீ வன்முறை
தெரிந்திருக்க நியாயமில்லை
எனக்கும்தான்
முதலில்

மழையின் நகக் கீறல்களுக்கு
இறகற்ற சிறகுகள்
ஆறுதல் அளித்த மற்றொரு
சாதாரண நாளில்
உன்னிடம் நான் தூதுவிட்ட
மௌனச் சிதறள்களின்
முகத்தில் அறைந்தது
உன் வன்முறை

விளிம்பில் நின்ற
பிரளயம் நிரம்பிய
மனதின் தாங்கவொன்னா
உறுத்தல்
உன்னிடம் அனுப்பிய
சொற் சிதறள்களை
வெற்றிடத்தில் தெளித்த
கனமெனக்கு உணர்த்திவிட்டது
உன் பயங்கரம்

என் மீது காட்டிய
எந்த வித வருத்தமுமற்ற
வெறுப்பை
திருபித்தர
யத்தனிக்கும் ஒவ்வொரு கனமும்,
கோபம் நிறைந்த
எண்ணங்களில் எரித்திட
முனையும் ஒவ்வொரு பொழுதும்
கலவரமூட்டுமுன்
பெயர் மட்டுமென்னை
இனித்தே வதைப்பதேன்.

Labels:

படித்தவர்களின் கருத்துகள் - 1

At Sat Aug 02, 10:04:00 PM GMT-6, Blogger செழியன் சொன்னது

கனமான கவிதை !

”சோளகர்” நாவல் பற்றிய உன் பதிவுக்குக் காத்திருக்கிறேன். சீக்கிரம் எழுது.

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல