ஜேகேவின் சில குறிப்புகள்: கூகிள் செய்மதி - சலுகை விலையில் உளவு பார்த்தல்

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Monday, September 08, 2008

கூகிள் செய்மதி - சலுகை விலையில் உளவு பார்த்தல்

ஜியோஐ (GeoEye1) எனும் செய்மதியை ஜெனரல் டைனமிக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் செப்டம்பர் 4 அன்று விண்ணில் செலுத்தியது. ஜியோஐ இப்போழுது புவிக்கு மேலே 800 கிமீ வாட்டப் பாதையில் சுற்றத் தொடங்கியுள்ளது. இந்த செய்மதி அமெரிக்க இராணுவ உளவு நிறுவனமொன்றின் அடுத்தப் பார்வை (NextView) என்ற திட்டத்தின் கீழ் ஜியோஐ நிறுவனத்தினரால் 2000 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இது பூமியை 1.5 (41 செமீ) அடி அளவிற்கு மிகத் துள்ளியமாக படமெடுக்கும் சக்தி படைத்தது.

இதில் முக்கியமான விசயம் என்ன வென்றால், இந்த செய்மதியால் எடுக்கப்படும் High Resolution படங்களை வாங்கும் பிரத்யோக உரிமையை கூகிள் பெற்றுள்ளது. கூகிள் 50 செமீ resolution படங்களை பெற்று தனது கூகிள் மேப் செயலியில் பயன்படுத்தும். இதற்காக கூகிள் எவ்வளவு பணம் கொடுத்துள்ளது என்பது தெரியவில்லை. யாஹூ, மைக்ரோசாப்ட், மேப்குவெஸ்ட் என பல வரைபட செயலிகளைத் தரும் நிறுவனங்கள் இருக்கையில் கூகிள் பிரத்யோக பயன்பாட்டு உரிமையை பெற்றுள்ளதால் மிக அதிக அளவிலான தொகையோ அல்லது முழுத்தொகையோ கொடுத்திருக்க வாய்ப்புள்ளது. கூகிளின் பெயரை ராக்கெட்டிலேயே எழுதியிருக்கிறார்கள் என்றால் பாருங்களேன்.



இதில் என்ன விசேசம் எனக் கேட்கிறீர்களா. இந்த உளவு செய்மதி அமெரிக்காவை மட்டும் படம் எடுக்கப் போவதில்லை. இந்தியா போன்ற எல்லா நாடுகளையும்தான் படம் எடுக்கும். அதாவது அமெரிக்க உளவுத்துறை வெளிநாடுகளை துள்ளியமாக விண்ணிலிருந்து படமெடுத்து உளவு பார்க்க கூகிள் உதவுகிறது.

இதைப்பற்றி குறை சொல்ல நமக்கு ஒன்றும் இல்லைதான். நிறுவனங்களும்/மக்களும் தரும் வரிப்பணத்தில் தானே எல்லா இராணுவங்களும் இயங்குகின்றன. கூகிள் ஒரு அமெரிக்க நிறுவனமாக இருந்தால் மட்டும் இந்த வாதம் பொருந்தும். ஆனால் கூகிள் ஒரு பன்னாட்டு நிறுவனம். இந்த பணம் நம்மைப் போன்று வெளி நாடுகளிலிருக்கும் கூகிள் மேப் பயனர்கள் அந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம் வந்த வருவாயல்லவா?. நம்மிடமிருந்த வரும் இலாபத்தால் நம்மையே உளவு பார்க்க சலுகை செய்வது போலிருக்கிறது இது.

இன்னொரு விசயம். கூகிள் அந்த படங்களைப் பெறும் முன்னர், அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்கள் அந்தப் படங்களை ஆராய்ந்து தமக்கு குந்தகம் விளைவிக்கும் படங்களை துப்புரவு செய்து விடுவார்களாம். அப்படியெனில் மற்ற நாடுகளின் இரகசிய படங்கள் அல்லது குந்தகம் விளைவிக்கத்தக்க படங்கள்? நிச்சயமாக இந்திய பாதுகாப்பு நிறுவனங்களின் ஒப்புதலுடன் அவை வெளியிடப்படப் போவதில்லை என்று மட்டும் ஒரு ஊகத்தின் அடிப்படையில் என்னால் சொல்ல முடியும்.

கூகிளின் கழுகுக் கண்களுக்கு நமது அரசாங்கம் என்ன பதில் சொல்லப் போகிறது. ஏற்கவே ஒரு முறை கலாம் இதுபற்றி கவலை தெரிவித்தது ஞாபகம் இருக்கலாம். எத்தனை நாளைக்கு நாம் IRS ரக செய்மதிகளை வைத்து படம் போடப்போகிறோம் என்று தெரியவில்லை. MapMyIndia.com போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அமெரிக்க நிலப்பரப்பை துள்ளியமாக இந்திய அரசாங்கம் படம் பிடிக்கலாமோ?

Labels: ,

படித்தவர்களின் கருத்துகள் - 1

At Fri Sep 26, 06:33:00 PM GMT-6, Blogger Vijay சொன்னது

Last point is very valid...

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல