ஜேகேவின் சில குறிப்புகள்: என்ன கொடுமை கலைஞர் ஐயா இது...

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Thursday, October 23, 2008

என்ன கொடுமை கலைஞர் ஐயா இது...

கலைஞரின் அனைத்துக் கட்சி கூட்ட தீர்மானங்களின் தீவிரம் மிக மகிழ்ச்சியைத் தந்தாலும், கொஞ்சம் பயத்தையும் தந்தது, வெகு சீக்கிரத்தில் இது பிசு பிசுத்து விடுமோ என்று. இருப்பினும் போராட்டம் முக்கிய பரிமானத்தை அடைந்த ஏதாவது நல்ல விளைவுகள் ஏற்படுத்தும் என்று ஒரு நப்பாசை இல்லாமல் இல்லை. ஆனால் அதற்குள் கலைஞரே ஆட்டத்தைக் கலைத்துவிடுவார் போலிருக்கிறது. இப்பொழுது எதற்கு வைகோவை கைது செய்ய வேண்டும். ’ஜெ’த்தனமான் அறிக்கைகளுக்கு பயந்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதா.

அப்படி என்ன வைகோ சட்டத்திற்கு புறம்பாக நடந்துகொண்டார். ஆயதப் போராட்டத்திற்கும், பிரிவினை வாதத்திற்கும் கருத்துரீதியாக ஆதரவு தெரிவிப்பது எந்த சட்டத்தின் படி குற்றம்? கருத்து ரீதியாகத் தானே எலோரும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். வைகோ, கண்ணப்பன், சீமான், அமீர், பாரதிராஜா என ஆதரவு தெரிவிப்பவர்களையெல்லாம் கைது செய்து உள்ளே தள்ளச் சொல்வது ஹிட்லர்தனமாக இருக்கிறது.

ஐயா, இந்திய அதி தேச பக்த சிகாமனிகளே...சிறைக்கம்பிகளைக் காட்டி மக்களின் குரல்வலைகளை நெறிக்காதீர்கள். நீங்கள் எது நடக்க வேண்டாம் என்கிறீர்களோ அதை நடக்கவைத்து விடாதீர்கள். வடக்கில் ஒரு காஷ்மீர் போதும். தெற்கிலும் ஒன்று வேண்டாம்.

கலைஞரே...தமிழர்களுக்கு உண்மையிலேயே முதுகெலும்பில்லை என்று நிரூபிக்க வேண்டாம். தயவு செய்து வைகோவையும் மற்றவர்களையும் பினையிலாவது உடனடியாக விடுவியுங்கள். நமது பங்காளிச் சண்டைக்கு இதுவா நேரம். ஒரு இனம் உங்களின் தீர்க்கமான நடவடிக்கைகளுக்காக ஏக்கத்தோடு காத்திருக்கிறது.

Labels: ,

படித்தவர்களின் கருத்துகள் - 6

At Thu Oct 23, 11:39:00 AM GMT-6, Blogger பழமைபேசி சொன்னது

தமிழனின் உணர்வுகளைத் தட்டி எழுப்புகிற நேரத்தில், உகந்த ஆட்சி இருக்க வேண்டும். அதை விடுத்து ஏனோ தானோ என்று பேசி கவனத்தைத் திசை திருப்புவதும் தவறுதானே? 1989-1990 மீண்டும் வர வேண்டும், தமிழன் தாழ்ந்து போக வேண்டும்? அதற்கு இடம் தராமல், அனைவரும் ஒன்று படுதல் வேண்டும்.

 
At Thu Oct 23, 11:45:00 AM GMT-6, Blogger Jayakumar சொன்னது

//அனைவரும் ஒன்று படுதல் வேண்டும்.// நிச்சயமாக. கருத்து வேறுபாடுகளை தள்ளிவைத்து கலைஞரின் பின் நிற்போம்...

அவ்வாறு மக்கள் பின் நிற்பதை கலைஞர் சொதப்பாமல் இருக்க வேண்டுமே என்ற ஆதங்கம் தான்...

 
At Thu Oct 23, 12:16:00 PM GMT-6, Blogger Jayakumar சொன்னது

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின் படி... வைகோ இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124A யின் படி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சட்டம் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகளால் 1850வாக்கில் இயற்றப்பட்டது என்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது.

Whoever, by words, either spoken or written, or by signs, or by visible representation, or otherwise, brings or attempts to bring into hatred or contempt, or excites or attempts to excite disaffection towards. 2[* * *] the Government established by law in 3[India], 4[* * *] shall be punished with 5[imprisonment for life], to which fine may be added, or with imprisonment which may extend to three years, to which fine may be added, or with fine.

Explanation 1-The expression "disaffection" includes disloyalty and all feelings of enmity.

Explanation 2-Comments expressing disapprobation of the measures of the attempting to excite hatred, contempt or disaffection, do not constitute an offence under this section.

Explanation 3-Comments expressing disapprobation of the administrative or other action of the Government without exciting or attempting to excite hatred, contempt or disaffection, do not constitute an offence under this section.



1. Subs. by Act 4 of 1898, s. 4, for the original s. 124A which had been ins. by Act 27 of 1870, s. 5.

2. The words "Her Majesty or" omitted by the A.O. 1950. The words "or the Crown Representative inserted after the word "Majesty" by the A.O. 1937 were omitted by the A.O. 1948.

3. The words "British India" have successively been subs. by the A.O. 1948, the A.O.1950 and Act 3 of 1951, sec.3 and sch. to read as above.

4. The words "or "British Burma" ins. by the A.O.1937 omitted by the A.O.1948.

5. Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "Transportation for life or any shorter term" (w.e.f.1-1-1956).

 
At Thu Oct 23, 12:20:00 PM GMT-6, Blogger Jayakumar சொன்னது

புதிய பிளாக்கர் பின்னூட்ட சட்டம் சுட்டிகளை சரியாக காட்ட மறுக்கிறது...

http://www.vakilno1.com/bareacts/IndianPenalCode/S124A.htm

http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Vaiko+arrested+for+sedition&artid=0%2fZeopRYm1g%3d&SectionID=lifojHIWDUU%3d&MainSectionID=lifojHIWDUU%3d&SEO=Vaiko%2c+MDMK%2c+secession&SectionName=rSY|6QYp3kQ%3d

 
At Thu Oct 23, 12:39:00 PM GMT-6, Blogger நிலாபாவை... சொன்னது

இது வரை எப்படியோ.... இனியாவது ஒன்றாக செயல்பட்டால் தான் நமக்கு வெற்றி கிட்டும்....

 
At Thu Nov 13, 03:34:00 PM GMT-6, Anonymous Anonymous சொன்னது

நிச்சயமாக. கருத்து வேறுபாடுகளை தள்ளிவைத்து கலைஞரின் பின் நிற்போம்...

///////////////////////////////////கலைஞர் பின்னால் நின்றால் ஒன்னும் நடக்காது .
அவர் வழக்கம் போல் இதிலும் அரசியல் அதயம் தேடுவர் , பிள்ளைகள் செல்வாக்கு ஏத்துவர் , தமிழ் தமிழினம் என்று பேசுவர் , எல்லாருக்கும் கோபாலபுரம் அல்வா கொடுப்பார் . இவரை காட்டிலும் ஜேஜே மேல் . காரணம் நமக்கு தெரியும் அவாளை பத்தி .. போதும் கலைஞர் பின்னால் போனது

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல